தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.. இதனை முன்னிட்டு அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அதிமுக அரசியலில் அதிகாரப் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. அதிமுகவின் கதவுகள் தனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதையும், எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் உணர்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தற்போது மாற்றுப் பாதைகளை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், ஓபிஎஸ்-ஸின் நிழலாக வலம் வந்த அவரது தீவிர ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் விடுத்துள்ள ஒரு […]
இந்தியர்களின் சமையலறையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் உப்பு, தற்போது பலருக்கு ஆயுட்கால நோய்களை பரிசாக அளித்து வரும் ஒரு நிசப்த கொலையாளியாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) எச்சரிக்கைப்படி, ஒரு ஆரோக்கியமான மனிதன் நாளொன்றுக்கு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி) உப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியர்களின் சராசரி உப்பு நுகர்வு 8 முதல் 11 கிராமாக இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த […]
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லேட்டா பகுதியில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன 19 வயது இளம் பெண்ணை தேடி வந்த போலீஸார், ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவரை மீட்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் தாயார் நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட […]
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், கள்ளக்காதல் மோகத்தால் ஒரு பிஞ்சு குழந்தை மற்றும் தாயையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜாதா (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் நகேஷின் மனைவி மமதாவிற்கு (25) தெரியவந்ததை அடுத்து, குடும்பத்தில் பெரும் புயல் வீசியுள்ளது. […]
உலகளவில் புற்றுநோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் நவீன வாழ்வியல் முறைகளே இந்த அபாயத்திற்கு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ’கூல் லிப்’ (Cool Lip) போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு குறித்து அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கல்பனா மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சிகரெட்டில் உள்ள அதே நிக்கோட்டின் இதிலும் கலந்திருப்பதால், இது நேரடியாக ரத்த […]
புதுச்சேரி அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் சூடுபிடித்துள்ள நிலையில், வன்னியர் சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக தனது அதிரடி வியூகத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘வன்னியர் பாதுகாப்பு பேரியக்கத்தின்’ தலைவரான செந்தில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். புதுச்சேரி மாநில திமுக தேர்தல் பொறுப்பாளரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, செந்திலை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார். திமுக – காங்கிரஸ் கூட்டணி […]
வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் மற்ற பூச்சிகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த, நாம் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு பொருள் ‘நாப்தலின்’ உருண்டைகள் (Naphthalene Balls). துணிகள் வைக்கும் பீரோக்கள் முதல் கட்டிலின் இடுக்குகள் வரை ஆங்காங்கே போடப்படும் இந்த சிறிய வெள்ளை நிற உருண்டைகள், உண்மையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் என்பதைப் பலரும் உணருவதில்லை. குறிப்பாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ‘ரசூண்டைகள்’ பயன்படுத்துவது பெரும் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையில் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, உயிர்கொல்லி நோயான புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளுக்கு மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 17 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல், சர்க்கரை நோய் தொடர்பான சில […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு சற்றே கசப்பான செய்திகளைக் கொண்டு வந்துள்ளது. இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிச்சலுகைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் முதல் முதலீட்டு சந்தை வரை பலவற்றின் விலைகள் அதிரடியாக உயரவுள்ளன. குறிப்பாக, காஃபி பிரியர்களுக்கு இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுவரை காபிக்கொட்டை வறுத்தல், காஃபி தயாரிக்கும் […]

