செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் […]

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குரூப்-1 முதல்நிலைத் தேர்வு விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து இன்று முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர […]

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும். டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். […]

கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் உள்ள காலணி ஒன்றில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2ஆம் ஆண்டு கல்லூரி படித்து வரும் அந்தச் சிறுமியின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து சிறுமியின் தாயாரிடம் […]

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவரா கொந்தூரத்து பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜார்ஜ் என்பவர், நேற்று முன்தினம் அதிகாலையில் தன் வீட்டின் சுவரில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார். இவருக்கு அருகே கிடந்த ஒரு சாக்கு மூட்டையைக் கண்ட துப்புரவுப் பணியாளர், சந்தேகம் அடைந்து அதைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு […]