பொதுவாக மழைக்காலத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் ஏற்படுவது இயல்பு. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது. அந்த வகையில், மழைக்கால நோய்களை தடுத்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், துளசி நீர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் துளசி நீர் குடிப்பதால் […]

அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கடும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை இந்திய கணினி அவசரக் குழு CERT-In (Computer Emergency Response Team of India) வெளியிட்டுள்ளது. அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் Google Android இயக்க முறையில் (Operating System) பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சைபர் தாக்குதலாளர்கள் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சாதனத்தில் அதிக நிலை அனுமதிகள் (elevated privileges) பெறவோ அல்லது தன்னிச்சையான குறியீடுகளை இயக்கவோ முடியும் […]

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் கவுஸ் (28). ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்த இவர், சுமார் 8 வருடங்களுக்கு முன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் சத்யம்பேட்டை கிராமத்திற்கு இடம் பெயர்ந்த கவுஸ், அங்கு விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார். சத்யம்பேட்டையில் வசித்து வந்தபோது, கவுஸ் மனைவிக்கு […]

நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை கண்காணிக்கவும் பயன்படும் உலகளாவிய இருப்பிட அமைப்பு (GPS – Global Positioning System) மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் மட்டுமின்றி, அந்த சாதனத்தை வைத்திருக்கும் நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் அறையில் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது போன்ற பல முக்கியமான கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று டெல்லி இந்திய […]

இந்திய ரயில்வே அமைச்சகம், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, முன்பதிவு முறையின் நன்மைகள் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மோசடி செய்பவர்கள் அல்லது பிற நேர்மையற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம், இந்திய ரயில்வே, IRCTC இணையதளம் அல்லது செயலி […]

கோடை வெப்பத்தை தணிக்க வீடுகளில் ஏர் கண்டிஷனரை (AC) பயன்படுத்துவது பெரும்பாலான மக்களின் பழக்கமாகிவிட்டது. ஆனால், குளிர் காலம் வந்தவுடன் ஏசியைப் பயன்படுத்தாமல் அப்படியே மூடி வைத்துவிடுகிறோம். உண்மையில், ஏசி என்பது வெப்பமான காலங்களில் மட்டுமல்ல, அதிக குளிராக இருக்கும்போதும் அறையின் வெப்பநிலையை சௌகரியமாக மாற்றப் பயன்படும் ஓர் இருவழிச் சாதனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஹீட்டர் வசதியுடன் கூடிய ஏசிகள் : உங்கள் ஏசியில் ‘ஹீட் மோட்’ (Heat […]

இந்தியாவின் நவீன ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய படியாக, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவைகள், நாட்டைத் தாண்டிய உலகத் தரமான அதிவேக ரயில்வே இணைப்பை வழங்கும் அவரது கனவிற்கு மற்றொரு முக்கிய அடையாளமாகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “ உட்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான […]

மாலி நாட்டில் துப்பாக்கி முனையில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு இதை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கொப்ரி (Kobri) என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்தது. கடத்தப்பட்டவர்கள் மின்சார இணைப்பு (electrification) திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என கூறப்படுகிறது. கடத்தலுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்திய பணியாளர்கள் மாலி தலைநகரமான பாமாகோ (Bamako)க்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நமது உடலில் பலவிதமான வலிகள் ஏற்படுகின்றன.. சில நேரங்களில் அதை நாம் புறக்கணிக்கிறோம். ஒரு சில நேரங்களில் வயிற்றில் கனத்த உணர்வு, சோர்வு, அல்லது இடுப்பு மற்றும் வயிற்றுக்கிடையில் சிறிய வலி ஏற்படலாம். ஆனால் இத்தகைய அறிகுறிகள் சில சமயம் கடுமையான நோய்களுக்கான எச்சரிக்கை சிக்னலாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.. இதுகுறித்து டாக்டர் ஜெய் சோக்ஷி பேசிய போது “வயிற்றின் வலது பக்கத்தில் தொடர்ச்சியான வலி இருந்தால், அது […]