இந்தியாவில் 2011-க்குப் பிறகு நடைபெறும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, முழுமையாக டிஜிட்டல் வடிவத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் கட்டமான வீட்டுப்பட்டியலிடல் நடவடிக்கை (House Listing Operation – HLO), 2026 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதில் வீட்டு வசதிகள், சொத்து உரிமை, வீட்டு வருமானம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படும். இந்தக் […]

மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே, ஜூலை 15 முதல் தமிழ்நாடு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், ரூ.1194 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட உடனேயே, அது விபத்தில் சிக்கி ஒரு கட்டிடத்தில் மோதியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், விமானத்தில் உள்ள ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்பிற்காக ஏன் ஒரு பாராசூட் வழங்கப்படவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. விமான விபத்து சம்பவத்திற்குப் […]

டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் ஹாங்காங்கில் அவசரமாக தரைறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்கே சென்றது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தால் இயக்கப்படும் AI315 விமானம், திட்டமிட்டபடி ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டது, ஆனால் விமானி ஒரு கணினி செயலிழப்பைக் கண்டறிந்ததால் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது […]

திருவையாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் நீதியன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர். இந்தியாவில் சுயமரியாதை திருமணங்களை முதலில் அங்கீகரித்தது தமிழ்நாடு தான் என பெருமிதத்தோடு கூறினார். மேலும் […]

மாற்றம் என்பது இயற்கையானது. ஆனால், அந்த மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி என்பது மனிதர்களின் மனப் பெருமைக்கு சான்றாக அமையும். ஜப்பானின் ஷிகொக்கு தீவில் உள்ள நகோரோ கிராமம் இன்று உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.. அது மக்கள் தொகையால் அல்ல, மனித வடிவ பொம்மைகளால். ஒருகாலத்தில் மக்கள் திரண்டுகொண்டிருந்த இந்த கிராமம், தொழில்கள் முடங்கியதனால் காலப்போக்கில் வெறிச்சோடி விட்டது. இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு புறப்பட்டனர். இறுதியில், வயோதிபர்கள் மட்டுமே […]

சொத்துப் பத்திரம் பதிவு செய்த பிறகு, அந்த ஆவணத்தில் பெயர், முகவரி, விலை, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால், அந்த பிழைகள் பின்னாளில் பெரிய சட்ட பிரச்சனைகளாக மாறக்கூடும். இவ்வாறு பிழை ஏற்பட்டால், அதை திருத்தும் வழிமுறைகள் குறித்து இப்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பொதுவாக பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்த, “பிழை திருத்தல் பத்திரம்” எனப்படும் Rectification Deed பதிவு செய்யப்படுகிறது. இது, உரிமையாளராக இருந்த விற்பனையாளர் […]