பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். உலகம் முழுவதும் இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கும்போது, அது நாளடைவில் கட்டி அல்லது புற்றுநோயாக மாறக்கூடும். மார்பக புற்றுநோய் வருவதற்கு வயது, மரபணு காரணங்கள், குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளை மாற்ற முடியாது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தலைவலி என்பது பலரும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை. மன அழுத்தம், தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவு, நீண்ட நேரம் செல்போன் அல்லது கணினி பயன்படுத்துவது, நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். தலைவலி வந்தவுடன் பலரும் உடனடியாக ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பார்கள். காபியில் இருக்கும் கஃபைன் தலைவலியை குறைக்குமா அல்லது மாறாக தலைவலியை அதிகரிக்குமா என்ற […]
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள இருபோக சாகுபடிப் பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காகவும், அதேபோன்று தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பெரியாறு அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 8) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பாசனத்திற்கு வினாடிக்கு […]
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் […]
காவிரி நீர் நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு சிறிதும் இல்லை. தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் பக்கத்து மாநிலத்திடம் பேசி தீர்வு காணும்போது அவமானம் நேரிட்டாலும், மக்களுக்காக அதைத் தாங்கிக் கொள்ளத் தயார்” என்று முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சனும், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத்தும் […]
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல், 22 வயது வாலிபரை கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் அஸ்வின் வயது 22. கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அஸ்வினுக்கு விஷ்ணு என்ற நண்பர் இருந்தார். தினமும் இரவு விஷ்ணுவின் வீட்டில் தங்குவது அஸ்வினின் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜயிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்களும் […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க விழிப்புணர்வு மிகவும் அவசியம். குறிப்பாக, தங்களுக்கு நேரும் தவறான தொடுதல் அல்லது அத்துமீறலை அடையாளம் கண்டு, அதை நம்பிக்கையான பெரியவர்களிடம் உடனடியாக தெரிவிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். அந்த வகையில், ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சி 8 வயது சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை வெளிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் குழந்தைகளுக்கு ‘குட் டச், […]
பள்ளி என்றாலே மாணவர்களின் பாதுகாப்பான உலகமாக இருக்க வேண்டும். ஆனால், துப்பாக்கிச்சூடு போன்ற கொடூர சம்பவங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள நொந்தபுரி மாகாணத்தின் பாங் க்ருவாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள […]

