கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி ஒன்றிலிருந்து எம். சான்ட் மணலை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், லாரி கரூர் – தென்னிலை சாலையின் கடைவீதிப் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், லாரியில் பயணம் செய்த வடமாநிலத் தொழிலாளர்களான சிக்கந்தர், பிரபாகரன் […]

தான்சானியாவில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கடும் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.. அந்நாட்டில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில், ஆட்சியிலிருக்கும் அதிபரின் முக்கிய எதிரிகள் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தான்சானியா அதிபர் சாமியா சுலூஹு ஹசன், இரண்டாவது பதவிக்காலத்திற்காக போட்டியிடுகிறார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில், இரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடத் தடைசெய்யப்பட்டதால், […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

காலநிலை நடவடிக்கைகளில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் ஐந்து மில்லியனுக்கும் (அல்லது 50 இலட்சத்துக்கும்) மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிலாய்ட் இந்தியா (Deloitte India) மற்றும் ரெயின்மேட்டர் ஃபவுண்டேஷன் (Rainmatter Foundation) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி ஸ்டேட் ஆஃப் கிளைமேட் ரெஸ்பான்ஸ் இன் இந்தியா’ (The State of Climate Response in India) என்ற இந்த […]

திருமணம் முடிந்த ஆரம்ப காலங்களில் கணவன் – மனைவி இருவரும் நெருக்கமாக உறங்குவது இயல்பு. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வேலையின் சுமை, மன அழுத்தம், அல்லது சில அற்ப காரணங்களுக்காக தம்பதிகள் படுக்கை அறையில் இடைவெளி விட்டு, அல்லது தனித்தனி படுக்கைகளில் தூங்கும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். இந்தச் சிறிய இடைவெளி நாளடைவில் கணவன்-மனைவி உறவில் என்னென்ன கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர். உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம் […]

நம்மைச் சுற்றிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், இனிப்புச் சேர்க்கப்பட்ட பானங்களும் நிறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், டயட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நீக்குவது ஒரு சவாலான காரியம். எனினும், ஒரு மாத காலத்திற்கு சர்க்கரையை முழுவதுமாக தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். முதல் வாரம் : குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் துஷார் தயால், சர்க்கரையைத் தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து […]

தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் 30-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்களில் முக்கியமான ஒன்றான முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் புனரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, ”திமுக […]

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (45). இவருக்கு திருமணமான நிலையில் ராம்நகர், சக்திநகரில் வசித்துக்கொண்டு, ஒரு ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கருமலைக்கூடலைச் சேர்ந்த 25 வயதான கல்லூரிப் பட்டதாரிப் பெண் ஒருவர் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். அந்த இளம்பெண் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அருள்பிரகாஷ், அப்பெண்ணை மிரட்டி, அலுவலகத்தின் மாடியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் […]

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், நடிகர் அஜித் குமார் இதுகுறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார். கார் பந்தயப் போட்டிகளை முடித்துவிட்டு நாடு திரும்பிய அஜித், தனது பேட்டி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. ஆனால், அந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய் மட்டும் பொறுப்பல்ல, நாமெல்லோருமே பொறுப்புதான் என்று […]

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 குறித்த ஆலோசனைகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ள வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 மற்றும் அதன் தனிப்பட்ட கணக்கு விபர ஒழுங்குமுறை அறிக்கை (திருத்தம்) தொடர்பான வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு இம்மாதம் 31-ம் தேதி வரை […]