வாயில் உள்ள தொற்றுநோய் கிருமிகள், குறிப்பாக பாக்டீரியாக்கள், உடல்நலத்துடன் நேரடி தொடர்புடையவை என்பதனை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், வாயில் உள்ள இந்த மைக்ரோப்களின் சரியான சமநிலை உடல்நலத்தை பாதுகாக்க முக்கியமாக கருதப்படுகிறது. இந்தநிலையில், தற்போது வெளியான புதிய ஆய்வு, வாயில் உள்ள பாக்டீரியாக்களில் பன்முகத்தன்மை இல்லாதது மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மன அழுத்தம் என்பது ஒரு சிக்கலான மனநலக் குறைபாடு ஆகும். இது நீண்டகாலம் […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 406 ஐ எட்டியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே தற்போது போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மத்திய கிழக்கு நாடுகளும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலிய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற திட்டத்தின் கீழ் ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் […]
கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ். இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து […]
வயிறு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 7-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்திலும், சோனியா காந்தி இதேபோன்ற வயிற்றுப் பிரச்சினைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்தில் இந்திராயானி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தலேகாவ்ன் அருகே இந்திராயானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் திடீரென இடிந்து விழுந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் ஏராளமான சுற்றுலா பயணிகள் […]
கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் […]
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மூன்று நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்துள்ளார். துணை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, சபாநாயகர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இன்று ஜிப்மர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை” என்ற நிகழ்வில் பங்கேற்ற பிறகு, துணை ஜனாதிபதி இங்குள்ள மத்திய நிர்வாக ஜிப்மரில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில் […]
தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வெள்ளியின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், டாலர் மதிப்பில் வெள்ளி 21 சதவீதம் உயர்ந்தது, அதே நேரத்தில் தங்கத்தின் விலை 28 சதவீதம் உயர்ந்தது. 2025 ஆம் ஆண்டில், மே 31 வரை வெள்ளி மற்றும் தங்கம் இரண்டும் 25 சதவீதம் உயர்ந்தன. இரண்டு உலோகங்களிலும் ஏற்பட்ட ஏற்றத்தை இந்திய முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஜூன் 2024 […]
மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் 6 நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகள் அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் […]
பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி அவர்களது வாரிசுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையில், https://eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சிட்டாவில் உள்ள […]