சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம். காரைக்குடி திருப்பத்தூர் -சாலை, கும்மங்குடி கிராமத்தில் நேற்று பிற்பகல் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த ஒன்பது பெண்கள். இரண்டு ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு முதல்வர் ஸ்டாலின் […]

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இந்த […]

திருமண உறவில் இருக்கும்போது கணவன் அல்லது மனைவி மற்ற ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் கள்ளக்காதல் விவகாரங்கள், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இது பல சமயங்களில் விபரீத விளைவுகளையும் கொடூரமான கொலைச் சம்பவங்களையும் ஏற்படுத்துகின்றன. அப்படியான ஒரு அதிர்ச்சிச் சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது. மனைவியின் திருமணத்தை மீறிய உறவை நிறுத்துமாறு கணவன் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்துடன் செல்ஃபி […]

ஆசியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலையின் காரணமாக, இதுவரை சுமார் 1,000-க்கும் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் பருவமழை தாக்கம் : இந்தோனேசியா, இலங்கை, தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பொதுவாக இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழையால் கனமழை பொழியும். இந்தக் காலத்துடன் 3 வெப்பமண்டலச் […]

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ‘டிட்வா’ புயலின் கடுமையான தாக்கம் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அவற்றின் விலைகள் திடீரெனச் சரமாரியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்று காய்கறிப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்தன. குறிப்பாக, காய்கறிப் […]

தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 1) முதல், சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்வதற்காக, அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கோ (RTO) அல்லது யூனிட் அலுவலகங்களுக்கோ நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கே ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, சாலை […]