தமிழ்நாடு அரசு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் உட்பட பலதரப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் பொருளாதார வலுவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றில், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை ஊக்குவித்து, அவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டம் தான் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் […]

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ம் தேதி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2008-ம் ஆண்டின் புள்ளி விவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகளுக்கு சாதிவாரி சர்வே நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி தான் பல மாநிலங்கள் சாதிவாரி சர்வேயை நடத்தி முடித்துள்ளன; நடத்தி வருகின்றன. […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த வைஷ்ணவி (22) என்பவர், தனது தாய் மாமனையே திருமணம் செய்துகொண்டு, 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலையில், வேறொரு ஆணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷ்ணவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஊரில் நடந்த திருவிழா ஒன்றில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா (24) என்பவரை சந்தித்துள்ளார். சூர்யாவுக்கும் […]

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ, தங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாததை கண்டித்து, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜாக்டோ – ஜியோ அமைப்பு தனது கோரிக்கைகளுக்காக எப்போதெல்லாம் போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் […]

மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை 30.11.2025-க்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தகுதி வாய்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் 2025 ஜனவரி 24 அன்று வெளியிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள் சிஆர்ஏ முறை மூலம் தங்களது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட விண்ணப்பத்தை […]