மனிதன் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும், அதிக ஆயுளுடனும் வாழ்வதற்கு தேவையான எளிய உணவு முறைகளை பழங்காலச் சித்தர்கள் தங்கள் பாடல்களிலும் சுவடிகளிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். மனித உடல் சீராக இயங்க, எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதில் சித்த மருத்துவம் பல நுட்பமான ஆலோசனைகளை வழங்குகிறது. தேநீர் பழக்கம் வேண்டாம் : காலையில் எழுந்ததும் காபி, டீ போன்ற […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாக தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஸ்தாபக நாள் இன்று. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பசியில் இருந்து உலக மக்களை […]
மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை, தேர்தல் ஆணையம் இம்மாதம் 6-ம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சாலையின் உயரத்திற்கு ஏற்ப தரைதளம் அமைக்கப்படுவதுடன் […]
மனித பிறவி எடுப்பதற்கு காரணமாக அமைவது நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தக் கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஒருவருடைய ஜாதகமும் அமைகிறது. அவ்வாறு அமையப்பெறும் ஜாதகத்தில் பலருக்கும் பல்வேறு விதமான தோஷங்கள் இருப்பது இயல்பு. இந்தத் தோஷங்களால் வாழ்க்கையில் தொடர்ச்சியான பல பிரச்சனைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே, தொடர்ச்சியாக ஒரே விஷயத்தில் சிக்கல்களைச் சந்திப்பவர்கள், முதலில் தகுந்த ஜோதிடரை அணுகித் தங்கள் […]
இந்தியா – ஆப்பிரிக்க அரசியலில் ஒரு முக்கிய நபராக திகழ்ந்த கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா (Raila Odinga), தமது 80-வது வயதில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தபோது திடீரென மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேவமாதா மருத்துவமனை, ஒடிங்காவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரான ஒடிங்கா, எதிர்க்கட்சித் தலைவராக 1997 முதல் 2022 வரை ஐந்து முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி […]
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றாலும், புதிய தலைமைகள் மற்றும் இளைய தலைமுறை வருகையால் தேர்தல் கணிக்க முடியாத போட்டியாக மாறலாம். திமுக தலைமையிலான […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை முடிந்து […]
இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2030 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 24வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு இந்தப் போட்டிகளை நடத்தும் உரிமையை வழங்க வாரியம் பரிந்துரைத்துள்ளது. இப்போது, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழா அகமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. வாரியத்தின் […]
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் […]
வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது […]

