அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஷின்பிங்கை சந்தித்து பேசினார்.. இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை அற்புதமான சந்திப்பு என்று கூறிய ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைக்கப்படும் என்று கூறினார்.. இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் ட்ரம்ப் இதுகுறித்து பேசிய போது “ இன்று பல […]

பொதுவாகப் புகைப்பிடித்தல் என்றாலே நுரையீரல் புற்றுநோய் அல்லது இதய நோய்தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களால் நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கப்படும் மற்றொரு முக்கியமான உறுப்பு வாய் ஆகும். பல ஆண்டு ஆய்வுகள், புகைப்பழக்கம் என்பது பல் சிதைவு, ஈறு நோய்கள், பல் இழப்பு, பல் சிகிச்சைகள் தாமதமாகக் குணமாகுதல் மற்றும் மிக முக்கியமாக வாய்வழி புற்றுநோய்கள் உள்ளிட்ட பல ஆபத்துகளைப் பன்மடங்கு அதிகரிப்பதாக எச்சரிக்கின்றன. […]

பண்டிகை காலங்களில் நம்மில் பலரும் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து வைப்போம்.. இது நம் கைகளுக்கு அழகான சிவப்பு நிறத்தை வழங்குகிறது.. நமக்கு எளிதாக கிடைக்கும் மருதாணி இலைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.. உடல் வெப்பத்தைக் குறைத்தல், புண்களை ஆற்றும் பண்பு, மற்றும் நகச்சுத்தி போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் ஆகியவை அடங்கும். மேலும், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் இது பலனளிக்கிறது. இந்த […]

தமிழ்நாட்டில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே ‘மோந்தா’ புயல் உருவானது. இந்த சூழலில், இந்தியப் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக, எதிர்மறை நிகழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தால், கடந்த 2019 ஆம் ஆண்டைப் போலவே, பல தீவிரமான மற்றும் அதி தீவிரப் புயல்கள் உருவாகக்கூடும் என்று […]

இந்தியாவில் FASTag பயன்படுத்துவோர் அனைவரும் புதிய Know Your Vehicle (KYV) விதிமுறையை நிறைவேற்ற வேண்டும்; இல்லையெனில் அவர்களின் டாக்கள் (FASTags) டோல் பிளாசாக்களில் தடைசெய்யப்படும் அபாயம் உள்ளது. அரசு இந்த விதியை கட்டாயமாக்கியுள்ளது, காரணம் FASTag மோசடிகளை தடுக்கவும், புதிய தானியங்கி டோலிங் அமைப்பை (Automated Tolling System) செயல்படுத்தவும். KYV எப்போது தொடங்கியது? KYV விதிமுறை 2024 அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் வங்கிகள் […]

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன் (33). இவர் ஒரு பைனான்சியராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27), அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் கர்நாடக மாநிலக் கிளை அலுவலகத்தில், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவைச் சேர்ந்த நாகேஷ் (25) மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனத்தில் […]

ரூ.1 கோடி பணத்தை சேர்ப்பது என்பது பெரிதாகத் தோன்றலாம், ஆனால் சரியான திட்டமிடல், மனநிலை இருந்தால் இந்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. பெரும்பாலான முதலீட்டாளர்களை பின்னுக்கு தள்ளுவது வருமானம் குறைவாக இருப்பது.. மாறாக அவர்கள் செய்யும் சில தவறுகள் தான். முதலீட்டை தாமதப்படுத்துவது, பணவீக்கத்தை புறக்கணிப்பது போன்ற பிழைகள் பணத்தை சேர்ப்பதை தாமதமாக்கலாம்.. ஆனால் தொடர்ச்சியான மற்றும் விழிப்புணர்வான பழக்கங்கள் மூலம், முதலீட்டாளர்கள் கூட்டுத் திரட்டல் […]