தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் முதல் சிறு குறு தொழிலதிபர்கள் வரை பலரது உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘நகைக்கடன்’ துறையில், வரும் மத்திய பட்ஜெட் 2026-ல் அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் வலுவான பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்தி, வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFC) வலுப்படுத்துவதன் மூலம், நடுத்தரக் குடும்பங்களின் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, […]

வெள்ளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் வெள்ளியின் கிட்டத்தட்ட ரூ.30,000 அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை, இது ரூ.3 லட்சத்தைத் தாண்டியது. கடந்த ஆண்டு, அதாவது 2025 இல், இது கிட்டத்தட்ட 170% அதிகரித்துள்ளது. வெள்ளி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்க ஒரு மாதம் மட்டுமே ஆனது. புதன்கிழமை, ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.3,45,000க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து […]

ஜொமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனங்களின் தாய் நிறுவனமான எட்டர்னல் (Eternal) நிறுவனத்தின் குழு தலைமை நிர்வாக அதிகாரி (Group CEO) பதவியில் இருந்து விலகுவதாக தீபிந்தர் கோயல் இன்று அறிவித்துள்ளார். பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், அல்பிந்தர் திந்த்சா (Albi) புதிய குழு CEO ஆக பொறுப்பேற்க உள்ளதாகவும், தனது ராஜினாமா 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனது கடிதத்தில் […]

பெரிய தொகையை சேமிக்க விரும்புகிறீர்களா? அதிக வருமானம் உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. உங்களுக்குத் தேவையானது ஒழுக்கமும் சரியான முதலீட்டு அணுகுமுறையும் மட்டுமே. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஒரு நாளைக்கு வெறும் 200 ரூபாய் சேமிப்பது மிகவும் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதை நீங்கள் தவறாமல் செய்தால், ஒரே […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்தது.. இந்த […]

வங்கிச் சேவைகள் உட்பட பல பணிகளை எங்கிருந்தும் செய்யக்கூடிய வகையில் டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சி அடைந்துள்ளன, ஆனால் மோசடிக்காரர்களும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.டிஜிட்டல் மோசடிகள் தொடங்கிய நாளிலிருந்தே KYC மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர்ப்பது எப்படி என்பதை மக்கள் அறிவது மிகவும் முக்கியம். அவர்கள் வங்கிகள் உட்பட அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் பெயர்களில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி, அவற்றின் இணைப்புகளை மக்களுக்கு அனுப்புகிறார்கள். […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தரிசு நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும் சத்தமில்லாமல் வளர்ந்து கிடக்கும் சோற்றுக் கற்றாழை, இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளின் தோற்காத மாற்றுப் பயிராக உருவெடுத்துள்ளது. ‘நலம் தரும் நற்குமரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை, வெறும் மருத்துவச் செடியாக மட்டும் பார்க்கப்படாமல், நிலையான வருமானம் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்டமான தொழில் வாய்ப்பாக மாறியுள்ளது. மிகக் குறைந்த நீர்ப்பாசனம், வறட்சியைத் தாங்கும் திறன் மற்றும் அதிக பராமரிப்பு தேவையில்லாத தன்மை ஆகியவற்றுடன், மண்ணின் […]

இந்தியாவில், தங்கம் மற்றும் வெள்ளி வெறும் ஆபரணங்களாக மட்டுமல்லாமல், ஒரு நம்பகமான முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகின்றன. இருப்பினும், அவற்றில் முதலீடு செய்யும்போது விலைகளில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வரி விதிகளைப் புரிந்துகொள்வதும் மிக முக்கியம். வரி வல்லுநர்களின் கூற்றுப்படி, தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி முதன்மையாக இரண்டு காரணிகளைப் பொறுத்தது: முதலீட்டின் வகை மற்றும் வைத்திருக்கும் காலம். சரியான நேரத்தில் முதலீட்டை மீட்டெடுக்கவில்லை என்றால், […]

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் மற்றும் பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மகத்தானத் திட்டம் தான் ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) திட்டம். குழந்தைகளின் வருங்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கூட்டு வட்டியின் அபரிமிதமான பலனை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட கால சேமிப்பை விரும்பும் பெற்றோருக்கு இது […]