எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. டவ் உள்ளிட்ட ஷாம்பு வகைகளில், பென்ஜென் என்ற மூலப்பொருளால் புற்றுநோய், லுகிமேனியா நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஷாம்பு நிறுவனம் பிராண்டுகளை திருமப்ப் பெறுவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே போலவே யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களில் பென்சின் என்ற வேதிப்பொருள் இருப்பதாகவும் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
ஆந்திர மாநிலத்தில் சமூக ஓய்வூதியத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த மாநில அமைச்சரவை அனுமதி அளித்தது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அறிக்கையின்படி, இந்த ஓய்வூதியம் அதிகரித்ததன் காரணமாக மாநில அரசுக்கு ரூ.130.44 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மாநிலத்தில் தற்போது 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர், மேலும் நடப்பு மாதத்தில் 2.43 லட்சம் […]
பாஸ்டேக் கட்டண முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் பாஸ்டேக்களுக்குப் பதிலாக புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது உள்ளது. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் என அழைக்கப்படும் இந்த அமைப்பு, வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்தப் புதிய […]
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் 4-ஆம் நாளான இன்று தங்கம் விலை சரிந்து காணப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தினசரி ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து […]
வீட்டிற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் பெற்ற நுகர்வோர் 800 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் Paytm ஒரு அற்புதமான சலுகையை கொண்டு வந்துள்ளது, அதன் படி Paytm மூலம் உங்களின் முதல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் பணம் செலுத்தியவுடன் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். எப்படி முன்பதிவு செய்வது…? […]
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இன்றைக்குள் இணைக்க வேண்டும். மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000 வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. இந்த […]
போர்ப்ஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ளது, அதன்படி இதுவரை முதல் இடத்தை பிடித்து வந்த டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ, எலான் மஸ்க்-ஐ பின்னுக்கு தள்ளி எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட், 191 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 73ஆகும். கடந்த திங்கள் கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவின் காரணாமாக, 4 சதவீதம் வீழ்ச்சியை […]
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் சென்ற அக்டோபர் மாதத்தில் 8.39 சதவீதமாக இருந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் 5.85 சதவீதமாக இந்த பணவீக்கம் குறைந்திருக்கிறது என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்ததால் கடந்த வருடம் இதே மாதத்தை விட பணவீக்கம் அதிகரித்திருந்தது. […]
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற FAME திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. FAME-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள […]
2022-2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத் தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், விளம்பர வரி, உரிமக்கட்டணம் போன்றவற்றை இணைய வழியின் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை இணையதளத்தின் மூலமாக வீட்டு வரி […]