நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி முதல் SBI கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகைக்கான பேமெண்ட் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது, ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இதற்கு ரூபாய் 100 அதிகரித்து 199 ரூபாய் + வரி வசூலிக்கப்பட உள்ளது. […]

வாரத்தின் ஐந்து நாட்களிலும் வர்த்தகம் இயங்கும் நிலையில் தீபாவளி அன்று தேசிய பங்குச்சந்தை  மற்றும் கமோடிட்டி சந்தை ஆகியவற்றிற்கு பொது விடுமுறை  ஆனால் தீபாவளியை ஒட்டி சிறப்பு வர்த்தகமாக முஹுரத்  வர்த்தகம் ஒரு மணி நேரம் செயல்படும். தீபாவளி முஹுரத் வர்த்தக நாளில் வர்த்தகத்தை தொடங்குவது ஆண்டு முழுவதும் செழிப்பையும் செல்வத்தை தருவதாக நம்பிக்கை உள்ளது. எனவே அந்நாளில் புதிய பங்குகளை வாங்குபவர்கள் அதிக ஆர்வத்துடன் பங்குகளை வாங்குவார்கள். எனவே […]

ஏற்கனவே நாட்டில் உள்ள மொத்த பிக்பஜாரையும் கைக்குள் கொண்டு வந்த அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ’மெட்ரோ’வை வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நவீன வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் சில்லறை வரத்தகத்தின் மற்றொரு மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ‘மெட்ரோ’வை வாங்க உள்ளது. இந்நிறுவனம் ஜெர்மனி நாட்டின் மொத்த விற்பைன நிறுவனாக உள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம் 34 நாடுகளில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றது. இதை ரூ.8000 கோடிக்கு […]

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக இருந்தது. இது, 2022 ஆகஸ்ட் மாதத்தில்12.41%ஆக இருந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது. உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் ஆகஸ்ட், 2022 9.93% லிருந்து செப்டம்பர், 2022-ல் 8.08%ஆக […]

பான் கார்டு எப்பொழுதும் இன்றியமையாத ஆவணமாக இருந்து வருகிறது, ஏனெனில் அதை பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. பான் கார்டு இல்லாத நிலையில், ஒரு தனிநபர் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது, நிதி முதலீடு செய்வதில் தொடங்கி தற்பொழுது அனைத்திற்கும் பான் கார்டு அவசியம், ஒருவர் பான் கார்டை தொலைத்து விட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வணிகம் அல்லது தொழிலைக் மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு பான் […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ மகளிர்‌ பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கம்‌ அமைத்திட தாட்கோ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் : ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர்‌ மகளிர்‌ மற்றும்‌ ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம்‌ […]

வீடுகளில் தாங்களாகவோ அல்லது அவரவர் விரும்பும் வியாபாரியிடமிருந்தோ இந்த மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் தகடுகளை பொருத்திக் கொள்ளலாம், அத்துடன் தாங்கள் பொருத்தியுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் தகட்டின் புகைப்படத்துடன், அதை பொருத்திய விவரங்களை மின்சார விநியோக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை, கடிதம் / விண்ணப்பம் வாயிலாகவோ அல்லது பிரத்யேக இணையதளங்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். இது பற்றிய தகவல் கிடைக்கப் பெற்ற 15 […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ பிரதம மந்திரியின்‌ கிஷான்‌ நிதி உதவி பெறும்‌ விவசாயிகள்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ செல்போன்‌ எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000/- வீதம்‌ இந்த […]

பதிவுத் துறை அதிக ஆவணங்களை பதிவு செய்ய இடமளிக்க துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தட்கல் டோக்கன் முறையை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. துணைப் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி வழங்கப்படும் வழக்கமான டோக்கன்களுக்கு கூடுதலாக தத்கலில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய டோக்கன் ஸ்லாட் முறையில், அதிக எண்ணிக்கையிலான துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 200 டோக்கன்களும், பிற துணைப் பதிவாளர் அலுவலகங்களில் 100 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் […]

அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 23.8% அதிகம். நேரடி வரி வசூல், மொத்த ரீஃபண்டுகள் ரூ. 7.45 லட்சம் கோடியாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3% அதிகமாக பதிவாகியுள்ளது. 2022-23 […]