சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவின் பங்கேற்பு தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற விழாவில் அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்த நிலையில், இதனை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கஸ்தூரி வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி […]

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தனது பட வாய்ப்புகள் மற்றும் திரைத்துறையில் தனக்கு ஏற்பட்டதாகக் கருதும் புறக்கணிப்புகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ‘ஆல் பாஸ்’ திரைப்பட நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துகள் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான், […]

‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் யாஷ், தற்போது தனது திரைப்பயணத்தில் அடுத்தடுத்த பெரிய படங்களை நோக்கி நகர்ந்து வருகிறார். கன்னட சினிமாவை இந்திய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் அவர், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பையும் மறுக்கவில்லை. அரசியல் தொடர்பான கேள்விக்கு யாஷ் அளித்த பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக […]

பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகிய 3 பேருக்கும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அதாவது FDA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு விமல் ஏலக்காய் விளம்பரத்தில் இந்த 3 நடிகர்களும் நடித்திருந்தனர். விமல் என்ற பிராண்ட் பெயர் பான் மசாலாவுடன் சந்தையில் பரவலாக தொடர்புபடுத்தப்படுவதால், ஏலக்காய் விளம்பரமும் பான் மசாலாவை மறைமுகமாக […]

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. சுதந்திர தின விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாக்னில்க் (Sacnilk) தரவுகளின்படி, தமிழ் மற்றும் தெலுங்கு சந்தைகளில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், இரண்டாம் நாளில் இந்தியாவில் ரூ.22.25 கோடி நெட் வசூலித்துள்ளது. இது முதல் நாள் வசூலான ரூ.15.35 கோடியை விட […]

பல ஆண்டுகளாக ஆக்‌ஷன், எமோஷன், கமர்ஷியல் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது திரைப்பயணத்தில் சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வழக்கமான சூர்யா படங்களில் இருந்து மாறுபட்ட குடும்பம், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி […]

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்ஸிக்’. இந்த படத்தை இயக்குனர் கீதூ மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திரைப்படம் தணிக்கைக் […]

பிரியாணியை மிகவும் விரும்பி சாப்பிட்டு வந்த நடிகர் சிலம்பரசன், தற்போது அசைவ உணவுகளை தவிர்த்து முழுமையாக சைவ உணவுக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். வயது அதிகரிக்கும்போது உடலின் தேவைகளும் மாறுவதால், உணவு பழக்கத்திலும் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உணவுப் பழக்கம் குறித்து பேசிய சிலம்பரசன், முன்பு தொடர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வதாகவும் […]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்தகால உறவில் இரண்டு ஆண்டுகளாக உடல் மற்றும் மனரீதியான துன்பங்களை அனுபவித்ததாக முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட மறைமுகமான சமூக வலைதளப் பதிவு, நடிகர் துருவ் விக்ரமுடனான காதல் முறிவு குறித்த பேச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தனது அனுபவம் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். தனது முன்னாள் துணையின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அனுபமா, அந்த உறவு தனது உடல்நலம் […]

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா, தங்களது திருமண வாழ்க்கை மற்றும் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவு குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளனர். குறிப்பாக, சூர்யாவை ‘கிரீன் ஃபிளாக்’ கணவர் என ஜோதிகா பாராட்டியதுடன், இருவரும் வீட்டில் சமமானவர்கள் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான உறவில் சமத்துவம் ஏன் முக்கியம் என்பது குறித்து உறவு நிபுணர் விளக்கியுள்ளார். […]