பதிவு விலக்குகளைப் பயன்படுத்தி வரி செலுத்தாமல் உயர் ரக வாகனங்களை இறக்குமதி செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஆபரேஷன் நம்கூர் என்ற பெயரில் சோதனை நடந்து வருகிறது.. கேரளா மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பனம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மானின் வீடு, தேவாராவில் உள்ள […]

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தாதாசாகேப் பால்கேவின் நினைவாக நிறுவப்பட்டது. நடிகை தேவிகா ராணி 1969 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவார். செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு […]

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் “தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது ஸ்ரீ மோகன்லாலுக்கு வழங்கப்படும் என்பதை இந்திய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது” என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு […]

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.. பன்முகத்திறமை கொண்ட மோகன்லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது.. செப்டம்பர் 23-ல் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு தாதா சாகே பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நடிகர் மோகன்லாலில் திரைப்பயணம் பல […]

பிரபல தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சில நாட்களுக்கு முன்பு ஒரு படப்பிடிப்பின் போது மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமம் அதிகரித்து வருவதால் ஐசியுவுக்கு மாற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்ட போதிலும், செப்டம்பர் 18ம் தேதி இரவு அவர் காலமானார். அவருக்கு வயது 46. இந்த மறைவு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை […]

சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்த பாடகர் ஜூபீன் கார்க்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பிரபல பாடகர் ஜூபீன் கார்க்கின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் […]

பிரபல அசாமிய பாடகரும் கலாச்சார ஐகானும் ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் நடந்த ஒரு ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்ற அவர் விபத்தில் சிக்கி உள்ளார்.. இந்த தகவலையறிந்த சிங்கப்பூர் காவல்துறையினர் அவரை கடலில் இருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. செப்டம்பர் 20 ஆம் தேதி […]