தவெக தலைவர் விஜய் உடன் 25 ஆண்டுகாலம் பயணித்த பி.டி. செல்வக் குமார் திமுகவில் இணைந்தார்.. இவர் 2003-ம் ஆண்டு முதல் விஜய்க்கு மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர்.. விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை பி.டி. செல்வக்குமார் தான் தயாரித்திருந்தார்.. இவர் கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்தார்.. இவர் சமீபத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் பிடி. செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்.. இந்த நிலையில் பிரபல யூ […]

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.. இன்று காலை அவரின் வீட்டுக்கு சென்ற போலீசார் கதவை திறக்கும் படி கூறினர்.. ஆனால் சவுக்கு சங்கர் கதவை தாளிட்டு உள்ளே இருந்து கொண்டு கதவை திறக்காகாதால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கைது செய்தனர்.. சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.. அவதூறாக பேசி […]

முருகனும் சிவனும் இந்து கடவுளா? இதுகுறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது சிவனும் முருகனும் இந்து கடவுளா என கேள்வி எழுப்பினார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் அங்கே தானே இருந்தது.. அதே தீபம் ஏற்ற தூண் இருந்தது தான்.. அப்போது ஏன் அதைப் பற்றி பேசவில்லை.. இரண்டு மாதங்களில் […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த சூழலில் நேற்று முன் தினம், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் […]

சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை சுபமுகூர்த்த நாளான 15.12.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் […]

விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே 193 கிமீ தொலைவிற்கு இரட்டை ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த விரிவான செயல்திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே ரயில்போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தஞ்சாவூர் – […]

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும். இன்று காலை திருப்பத்தூர், தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும், நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு […]

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு […]

தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும்வகையில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பெண்கள் […]