fbpx

ஒரே பதவியில் 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை, போனஸ் உயர்வு வழங்கப்படுவது குறித்து புதிய விளக்கத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், நிதித்துறையின் சார்பில் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 216ன்படி, ஒரே பதவியில் …

கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி தியாகராஜன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபானங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் தியாகராஜனுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான், நவ்லாக் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகவும், இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மிகவும் வரவேற்பு பெற்ற திட்டம் என்றால் அது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 6 லட்சம் குடும்ப …

சமீபத்தில் எத்தனை என்கவுண்டர்கள் நடத்துள்ளன..? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சத்யஜோதி என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது சகோதரர் வெள்ளைக்காளி தற்போது சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால், வீடியோ …

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இளைஞர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, படித்துவிட்டு வேலையின்றி, இருப்பவர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சில தகுதிகளை இளைஞர்கள் …

தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்வதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு அரசு உத்தரவு. அதன்படி இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்கள் கிடையாது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் …

மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தமிழக அரசு சார்பில் இலவசமாக நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் …

ஓட்டுநர் உரிமம், வாகன ஆர்.சி.யுடன் ஆதார் மற்றும் செல்போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை. இதில் பலவற்றில் ஆதார், செல்போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், ஓட்டுநர் …

திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனித உரிமை மீறல் ஆணைய உறுப்பினர் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் அதிகரித்து வரும் வன்முறைக் காட்சிகள், சமூகவியலாளர்கள் மற்றும் உரிமைப்போராட்டக் குழுக்களில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மனித உரிமை மீறல் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், சமூகத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வன்முறைக் காட்சிகளை திரைப்படங்களில் …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், விரைவில் 1.55 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கயவிழி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் மனிதவள …