தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற அரசின் அனைத்து நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இதனால் ரேஷன் கார்டில் திருத்தம் கோரி விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை சமீபகாலமாக கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய முக்கியக் கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பதிவுத்துறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலான இட ஒதுக்கீடு அடிப்படையில் உதவி பதிவுத்துறை தலைவர் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழங்கப்படவில்லை என்பது தொடர்பான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. பதிவுத்துறையில் காலியாக உள்ள உதவி பதிவுத்துறை தலைவர் பணியிடங்களை நிரப்பவும், பதிவுப் பணி தொய்வில்லாமல் நடைபெறவும், மக்களுக்கு பதிவு சார்ந்த சேவைகளை வழங்குவதை துரிதப்படுத்தவும் பதிவுத்துறையின் நிர்வாக நலன்களை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள […]
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான மின்சாரத் தேவையை உறுதி செய்யும் வகையில், நாட்டின் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை அளிக்கும் பிரம்மாண்டமான திட்டமான ‘பிரதம மந்திரி சூரிய சக்தி – இலவச மின்சார திட்டம்’ (PM Surya Ghar: Muft Bijli Yojana) மத்திய அரசால் ரூ. 75,000 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கூரை சூரிய மின்சக்தி திட்டம் மூலம், வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை […]
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில், மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைகள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோருடன் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தனர். […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர். கள ஆய்வுப் பணி விவரங்கள் : வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), இந்த கணக்கெடுப்பின்போது […]
தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, […]
கோவை மாவட்டம் இருகூர் அருகே ஏஜி புதூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியானது. ஏஜி புதூர் அருகே தீபம் நகர் பகுதியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தாகவும் அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் i20 கார் ஒன்று வந்து, காரிலிருந்த நபர்கள் அப்பெண்ணை தாக்கி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாகவும் கூறப்படுகிறது.. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதைக் […]
2011-ல் அதிமுக கூட்டணிக்கு வைகோ வராமாட்டார் என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் பொய் சொன்னதாக மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று கூறியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் இன்று பதிலளித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அம்மா என்ன பேச சொல்கிறாரோ அதை மட்டும் பேசி வந்திருக்கிறேன்.. அவர் சொல்லின் படியே செயல்பட்டு வந்திருக்கிறேன்.. அண்ணன் வைகோ மீது நான் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன்.. அவர் என்ன பேசினாலும் […]
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளக்காரன்பட்டியில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பி. ஃபார்ம் படித்து வரும் வினிதா (21) என்ற அந்த மாணவி, உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில், அவருடைய முன்னாள் காதலன் ரஞ்சித், வினிதா […]
சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலைப் பகுதியில் உள்ள கடற்கரையில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், கடற்கரை மணல் பரப்பில் தலையின் பின்புறம் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக மெரினா போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்த மயிலாப்பூர் […]

