தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் […]

சென்னையில் கழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் தமிழக டி.ஜி.பி.க்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், மனவேதனை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். […]

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வீடியோவில், த்ரிஷா நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோருக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இந்த விழாவிற்காக த்ரிஷா மஞ்சள் நிற […]

சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளின் களப்பணி மற்றும் பயண சிரமங்களைச் சுட்டிக்காட்டி வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், தமக்கு சொந்தமாக வாகனம் இல்லாததால் 280 கி.மீ தொலைவிலிருந்து வாடகை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் […]

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மக்கள் அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்யிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்ட […]

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் குடியரசு தினத்தைப் போன்றே சுதந்திர தினத்திலும் […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமான மரபாக திகழ்கிறது. பல தசாப்த கால போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய இந்த வரலாற்று நாளுக்குப் பின்னால் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. […]

தமிழகத்தில் பொதுமக்கள் நேரில் வராமல் ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களைப் பதிவு செய்யும் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’திட்டம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் இத்திட்டம் தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் […]

இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]

கடந்த சில தினங்களுக்கு முன்பு எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்து, அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தற்போது மீனவர்கள் 9 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக […]