fbpx

தென்காசியில் கணவனை கொலை செய்துவிட்டு, நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (30). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில், முத்துக்குமார் மஞ்சள் காமாலை காரணமாக திடீரென மயக்கம் …

மும்மொழிக் கொள்கை குறித்து விஜய் எல்லாம் கருத்து சொல்லவே கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “இந்தியை நாங்கள் திணிக்கவில்லை. 3-வதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட …

மும்மொழி கொள்கையை கேள்வி கேட்கும் தவெக தலைவர் விஜய்யின் மகன் எங்கு படித்தார் என்று ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, ஹெச்.ராஜா, ”தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வருமான வரி உச்சவரம்பு யாரும் எதிர்பார்க்காத அளவில் …

Student complaint box: அடுத்தடுத்து பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர் மனசு பெட்டியை மீண்டும் வைக்க அரசு பள்ளி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2012ம் ஆண்டு …

பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படு்ம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை, கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் மேலாண்மைக்கான வரைவு வழிகாட்டுதல்களை மாநகராட்சி இணையதளத்தில் https://chennaicorporation.gov.in/ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மீது, சேவை வழங்குபவர்கள், பில்டர்கள், …

பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகளை வழங்குகின்றன. படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களின் உதவித் தொகைக்காக 3 விதமான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம்தோறும் …

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கந்தம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 40 மணியளவில் பயங்கர வெடி சத்தத்துடன் கூடிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையிலிருந்து பொருட்கள் அனைத்தும் சிதறி வெளியே விழுந்துள்ளது. மேலும் கடை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடையில் …

சென்னை, வேலூர், மதுரை, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. கோடை காலம் ஆரம்பமாவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளை முதல் வருகின்ற 21 ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட …

”கோபாலபுர வீட்டைத் தாண்டி எந்த பெண்ணுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை” என்று அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சரால், ஒரு ஏர்ஷோவை கூட ஒழுங்கா நடத்தத் தெரியல. அத்தனை அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்காங்க. இவர் மணிப்பூர் பாலிடிக்ஸ் பத்தி பேசிட்டு இருக்காரு. பெங்களூர்ல ஏர்ஷோ நடக்குது. …

தலித் மக்களின் மீதான வன்முறை சம்பவங்களைப் பற்றிய விவாதத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ‘உங்களில் ஒருவன்’ என்ற நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதில், மத்திய பாஜக அரசு, அதிமுக பொதுச்செயலாளர், திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். …