தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பலமாக மோதி சிக்கிக் கொண்டது. ஆனால், காரின் மோதிய சத்தத்தையோ? பின்னால் கார் சிக்கி இருந்ததையோ? லாரி ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் லாரியைத் தொடர்ந்து இயக்கிச் சென்று உள்ளார். இதனால் விபத்துக்கு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னையில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தலையில் சுமத்தப்பட்ட பேரிடி என்று கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுவாக நடைமுறையில் இருக்கும் வரியின் மதிப்பீட்டிலிருந்து 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் வரை உயர்த்துவது என்பது வழக்கமானதுதான். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் திடீரென ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்கிற ரீதியில் பெருமளவில் […]
கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இக்கொலை வழக்கின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையை ஆளும் த.வெ.க. அரசு மூடிமறைக்க பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். தம்பி அமுதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த சீமான், கல்விக்கூடங்களில் நிலவும் பகைமையும், போதைப்பழக்கமும் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. விபத்தின் போது பலத்த சத்தத்துடன் மருந்துகள் வெடித்துச் சிதறியதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் சம்பவ […]
திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகாரில், 2025 டிசம்பர் 14ம் தேதி மலப்பம்பாடியில் திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த மாநாடு நடைபெற்ற 124 ஏக்கர் நிலம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு […]
கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 80 அடியைக் கடந்து உயர்ந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அடைந்துள்ளனர். அணைக்கு வரும் நீரின் வரத்தைப் பொறுத்து நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 79.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி […]
பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் வளர்த்து வரும் லார் கிப்பான் வகை குரங்கு குறித்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் அவருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நடிகர் விக்ரம், லார் கிப்பன் (Lar Gibbon) என்ற சிறிய வகை அரிய குரங்குடன் விளையாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. விக்ரமின் முடியைப் பிடித்து இழுத்தபடி அந்த அரிய வகை குரங்கு அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் […]
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பல்லாயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீடு குறித்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருவதால் பொதுமக்களும் சொத்து உரிமையாளர்களும் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். முன்னதாக கணக்கிடப்பட்ட போது குறைவாக வரி மதிப்பிடப்பட்டிருந்த சுமார் 3.5 லட்சம் சொத்துக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மட்டுமே இந்த மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் […]
மன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு கோரி கோரிக்கை வைத்து வந்தாலும் இந்த பிரச்சினை முடிந்தபாடில்லை. தமிழக முதல்வர் விஜய்யும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி […]
சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளன. பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள்:கே.கே. நகர் பகுதியில், காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா […]

