நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ‘டிட்வா’ புயலின் கடுமையான தாக்கம் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அவற்றின் விலைகள் திடீரெனச் சரமாரியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்று காய்கறிப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்தன. குறிப்பாக, காய்கறிப் […]

தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 1) முதல், சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்வதற்காக, அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கோ (RTO) அல்லது யூனிட் அலுவலகங்களுக்கோ நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கே ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, சாலை […]

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய விலை விவரங்கள் : இந்த விலை குறைப்பு சென்னை மட்டுமல்லாமல், டெல்லி, […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் பதிவு விவரங்கள் : வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் […]

சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பினை உடனுக்குடன் கண்டறியும் வகையில் இணைய வழியில் உள் தணிக்கை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; பதிவுத்துறையால் ஆவணப்பதிவு உள்ளிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சேவைகளும் முழுமையாக கணினி மூலம் இணைய வழி பயன்பாட்டிற்கு கொண்டு வர STAR 2.0 Module. 13.02.2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. […]

எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.மின் கட்டண […]

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. […]

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர், அவருடைய கணவனால் இன்று அதிகாலை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையானவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்றும், கொலையைச் செய்தவர் அவரது கணவர் பாலமுருகன் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக பாலமுருகனிடமிருந்து பிரிந்து வந்த ஸ்ரீபிரியா, […]