வட தமிழகத்தை நோக்கி ‘டிட்வா’ புயல் நெருங்கி வருவதன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ‘டிட்வா’ புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று (நவம்பர் 30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை […]

தமிழ்நாட்டில் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்ற புதிய விதிமுறை, நாளை (டிசம்பர் 1, 2025) முதல் அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த முக்கிய மாற்றத்தை அமல்படுத்துமாறு போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கிய பிறகு, அவற்றை […]

அனைத்து விவசாயிகளும் டிசம்பர் 1 வரை பயிர்க்காப்பீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில், பிரதமந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நடப்பாண்டு குறுவைப்பருவத்தில் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து மத்திய அரசால் விலக்களிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய பயிர் […]

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி திதியில் சிவ வழிபாடு செய்வது மன அமைதி, செல்வ வளம் மற்றும் வாழ்வில் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பௌர்ணமி நாளில் சிவ தரிசனம், கிரிவலம், விரதம், மற்றும் புனித நீராடுதல் ஆகியவை விசேஷ பலன்களை அளிப்பதுடன், பாவங்களைப் போக்கி சிவனின் அருளையும் பெற்றுத் தரும். அதிலும், நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமியில் கிரிவலம் வருவது முக்தியை […]

‘டிட்வா’ புயலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சற்று நேரத்தில் தமிழக – புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 25 – 50 கிமீ தொலைவில் புயல் மையம் கொள்ளும் என தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று மாலை புயல் வலுவிழக்கும். மேலும், காலை 7 மணி வரை சென்னை, நாகை […]

வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் […]

டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.. இந்த புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து […]

டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.. இந்த புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து […]

உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகளை, தாய் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கும் 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்ட ஓட்டுநர், அந்த உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பரிமளா தம்பதியினர், சுமார் 10 ஆண்டுகளாக திருமணம் முடிந்து பெருந்துறையில் உள்ள காசிப் பிள்ளை பகுதியில் வசித்து வந்தனர். ஸ்ரீதர், அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வந்த […]