சென்னை தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள இராமச்சந்திரா தெருவில் அமைந்திருக்கும் ‘மங்கள வில்லா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் கிரிதர் என்பவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், கிரிதர் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தமிட்டவாறே […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 5,90,13,184 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 92.04 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5,90,13,184 படிவங்கள் இதுவரை ( நவம்பர் 15 மாலை 3 மணி வரை ) விநியோகிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் […]
நாமக்கலில் ஒரு முட்டை விலை 595 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. 2024 டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 590 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே, […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த […]
SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசசன் நமக்கு அளித்த முதல் உரிமை.. வாக்களிப்பது என்பது உரிமை இல்லை.. அது தான் வாழ்க்கை.. SIR மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட வாய்ப்பு.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளது.. […]
தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக செயல்படுவதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.. கொலை, கொள்ளை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இதுறித்து திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை […]
தமிழ்நாட்டில் தள்ளுவண்டி கடைகள் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்கள் அதிகம் நாடும் உணவக வடிவமாக வளர்ந்து வருகின்றன. குறைந்த செலவில், சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்குவதால் இவை பொதுமக்களின் தினசரி தேவையை பூர்த்தி செய்கின்றன. இட்லி, தோசை, பொறி வகைகள் முதல் வட இந்திய, சீன உணவுகள் வரை பல்வேறு வகைகள் தள்ளுவண்டிகளில் கிடைப்பதால், வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு இவை விரைவான மற்றும் மலிவான உணவு […]
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி […]
நேற்று விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.. எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம்.. இன்று இருக்கும் காங்கிரஸ் நேரு காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது.. இன்று இருக்கும் காங்கிரஸ் நாட்டை காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ்.. தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ்.. நாட்டை பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் […]
தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி அக்கட்சி தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதி உள்ள கடிதத்தில் “ எங்கள் கட்சி (தவெக) தற்போது தமிழகமெங்கும் தெளிவான, கணிசமான ஆதரவையும் உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவது எங்கள் உறுதியான நோக்கம். இந்த […]

