மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் சில மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த மோதல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை.. கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு […]

கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. குழுவினர் விசாரித்து வருகின்றனர். கரூர் தாந்தோணிமலையில் […]

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கமால் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அந்த தீர்ப்பில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.. மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.. மசோதா விவகாரத்தில் […]

தமிழகத்திற்கு மற்றொரு துரோகத்தை மத்திய அரசு செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்த விதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை […]

இந்திய சாலைகளில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு கடுமையான நிதிச் சுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், இனிமேல் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய அறிவிக்கையின்படி, பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் செலவு, பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சகம் வாகனங்களின் வயதின் அடிப்படையில் கட்டணப் பிரிவுகளைத் […]

சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டை தலைகீழாக மாற்றும் வகையில், இந்தியாவில் தக்காளி விலை கடந்த சில வாரங்களில் திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மிக கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதமே, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அரசு புள்ளி விவரங்களின்படி, நாட்டின் சில்லறை சந்தையில் கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மட்டும் தக்காளி விலை சுமார் 50% வரை அதிகரித்துள்ளது. அக்டோபர் 19 […]

தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக, விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வரும் நிலையில், நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அவர், பாஜகவை ஆதரிக்கும் அல்லது அந்த கூட்டணியில் இருக்கும் […]

திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55) ஆகியோர், சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையே, சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்தத் தொடர்பை பற்றி அறிந்த கணவர் ராஜா, தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதன் காரணமாக, கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு, குடும்பத்தில் […]