தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 […]

கோவையில் 3 வாலிபர்களால் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 20 வயது கல்லூரி மாணவி வழக்கில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை சித்ரா சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கோவையைச் சேர்ந்த தனது காதலனுடன் காரில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த 3 வாலிபர்கள், மாணவியின் […]

இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத்திட்ட வடிவமைப்புக்கான உயர்மட்ட மற்றும் வல்லுநர் குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; மாநிலக் கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட வடிவமைப்பு […]

டிக்டாக் மூலம் பிரபலமடைந்து, பின்னர் யூடியூப், பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமான ஜி.பி. முத்து, தற்போது பக்கத்து வீட்டுப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள பெருமாள் புரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி, ஜி.பி. முத்துவின் இரு மகன்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்து […]

பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச் சீட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என […]

கிருஷ்ணகிரி மாவட்டம் போயர் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநரான ராஜதுரை (30), கல் குவாரியில் வேலை செய்தபோது ஏற்பட்ட தகாத உறவு, பின்னாளில் பணப் பிரச்சனையாக மாறி, கொலை மிரட்டல் மற்றும் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. மாந்தோப்பு ஒன்றில் ராஜதுரை மீது நடந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (நவம்பர் 4) மாந்தோப்பில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ள […]

தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்ததாகவும், 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.. மேலும் “ இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. […]

மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நம் சொந்தங்களை இழந்ததால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தோம்.. வேதனையில் அமைதி காத்த போது தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் வலைப்பின்னப்பட்டது.. சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அவற்றை துடைத்தெறியப் போகிறோம். தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக கொடுக்கப்பட்ட உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. […]