திண்டுக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக, மேட்டுப்பட்டி பகுதியில் ஒரு பிரம்மாண்ட அரசியல் இணைப்பு விழாவை முன்னெடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த உற்சாகமான நிகழ்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம் அருகே அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆதி என்பவர், மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியைப் பார்ப்பதற்காக இன்று அதிகாலை […]
பாட்டாளி மக்கள் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுக்கோப்பிற்கும் முரணாக செயல்பட்டதாகக் கூறி 3 எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவக்குமார் (மயிலம் சட்டமன்ற உறுப்பினர்), சதாசிவம் (மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்பாடுகளில் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழக வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் நிலவி வந்த காலதாமதத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பயிர்க்கடனுக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, அதே நாளில் கடன் தொகையை வழங்கும் புரட்சிகரமான திட்டம் இப்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழகத்தின் அனைத்து […]
தமிழ்நாட்டில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்புடன், தமிழக […]
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் சம்பவத்தின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகளும், கட்சி தாவல்களும் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் மாவட்ட செயலாளரும், சமீபத்தில் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டவருமான கவிதா ராஜேந்திரன் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரைவில் தவெக-வில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது ஓபிஎஸ் ஒரு நிலையற்ற அரசியல் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் சதுரங்கம் இப்போதே விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தவெக களமிறங்கிய பிறகு, மாநிலத்தின் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகியுள்ளது. அதிமுக-வின் மூத்த முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு அரங்கேறி வரும் ரிட்டர்ன் பாலிடிக்ஸ் கட்சித் தலைமைக்கு ஒரு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி […]
தூத்துக்குடி மாவட்ட மக்களின் வங்கி தேவைகளை எளிதாக்கும் வகையிலும், அவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உறுதி செய்யும் வகையிலும் அஞ்சல் துறை அதிரடியான புதிய சேவைகளை தொடங்கியுள்ளது. இது குறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில், அஞ்சலகங்களின் நவீன முகத்தையும், சாமானியர்களுக்கான நிதிச் சேவைகளையும் விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி’ (IPPB) மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள […]

