திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி தனிஷ்கோடி காலனியில் மர வேலை செய்யும் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் தனது மனைவி சௌமியா மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்த ஸ்டாலின் என்பவருக்கும் செந்தமிழ்ச்செல்வனின் மனைவி சௌமியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை செந்தமிழ்ச்செல்வன் பலமுறை கண்டித்தும் அவர்கள் உறவை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சௌமியா தனது செல்போனில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இதை […]

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த தொடர் விலை உயர்வு, நடுத்தர மக்களைத் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்க வைத்திருக்கும் நிலையில், எப்போதுதான் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் குறித்து பேசிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை குறைய ஒரே ஒரு வாய்ப்பு […]

திருச்சியில் இந்து கடவுளான ராமரின் உருவ படத்தை செருப்பால் அடித்து தீவைத்து எரித்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் , நாவல்பட்டு காவல் எல்லைக்குட்பட்ட அயன்புதூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி, “ஐந்தம் தமிழ் சங்கம்” சார்பில் ஆசிவக திருமால் வழிகாட்டுதல் விழா” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக யார் இணைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர். தகுதியான பயனாளிகள் நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம் என்ற காலக்கெடு உள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு : மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். இதில் உள்ள தகவல்களில் […]

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் என்ற வரலாற்று சிறப்பைப் பெற்றது கூத்தனூர் சரஸ்வதி கோயில். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலும் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் தான் இந்த பிரசித்தி பெற்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமாக, வெள்ளைத் தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில், வெண்ணிற ஆடை அணிந்து தேவி அருள்பாலிக்கிறார். அன்னையின் வலது கீழ்க் கையில் […]

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான […]

சென்னை – மதுரை இடையே தினமும் நடைபெறும் விமானப் போக்குவரத்து சேவையில், நேற்று மதியம் ஏற்பட்ட ஓர் எதிர்பாராத நிகழ்வு, பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து சரியாக பகல் 12.40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தை நெருங்கி, பகல் 1.45 மணியளவில் தரையிறங்க ஆயத்தமானது. ஓடுபாதையில் […]

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. விமான நிலைய மேலாளர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தின் குப்பைத் தொட்டிகளில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், இயக்குநருக்கு தகவல் அளிக்க, நள்ளிரவில் விமான நிலைய அவசரகால பாதுகாப்பு குழுவின் கூட்டம் நடந்தது. பின்னர் உயர் அதிகாரிகள், பிசிஏஎஸ், […]

தாயுமானவர் திட்டத்தில் 2 நாள் ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று […]