fbpx

பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஆட்டோக்களை, ஆண்கள் ஓட்டினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த திட்டம் …

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்த கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 26ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் …

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 …

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கோடைகால பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தடகளம், வாலிபால், டேக்வாண்டோ. கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்கேட்டிங் ஆகிய விளையாட் விளையாட்டுக்களில் நடைபெறவுள்ளது. கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இது குறித்து தருமபுரி …

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் …

நியோ மேக்ஸ் குழுமம் தொடர்புடைய ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிறுவனம் நியோ மேக்ஸ். இந்நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியது. இதுதொடர்பான புகாரின் பேரில், நியோமேக்ஸ் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற …

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பள்ளியில் படித்து வந்துள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க சிறுமியின் பெற்றோர் முடிவு செய்த நிலையில், இதுகுறித்து தனது காதலனிடம் கூறியுள்ளர். …

நடிகர் சந்தானம் படங்களுக்கு காமெடி வசனங்கள் எழுதிய சிரிப்பு நடிகர் சிரிக்கோ உதயாவின் தற்போதைய நிலை குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் சிரிக்கோ உதயா. இவர், நடிப்பை தாண்டி இசையின் பக்கமும் கவனம் செலுத்தியிருக்கிறார். 35 ஆண்டுகளாக சினிமா துறையிலும், இசை துறையிலும் பணியாற்றியுள்ளார். சிறந்த மிமிக்ரி …

அரசின் விண்வெளி தொழில் கொள்கை என்பது முதல்வர் முக.ஸ்டாலினின் குடும்பம் பயனடையவே உருவாக்கப்பட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மருமகன், விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு விண்வெளி தொழில்துறையின் கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டின் நிழல் முதல்வர் …

தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தான் நம் இலக்கு.. அதை இலக்காக கொண்டு பாஜக தொண்டர்கள் அனைவரும் கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் பாஜக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக-பாஜக …