திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள புனித திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த பொதுநல மனுக்கள் வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். நீதிபதி நிஷா பானு மனுக்களில் எதிலும் தலையீடு தேவை இல்லை என கூறி அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார். […]

மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று இந்துஸ்தான் டைம்ஸ் […]

சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் […]

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை மாநகர கவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சேலம் நரசோதிபட்டியில் உள்ள கார்த்தி நகரைச் சேர்ந்த ஆர். மோகன்ராஜ் (43), ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், அவரது நிறுவன அதிகாரிகள், மோகன்ராஜ் மீது, நிறுவனத்தின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஷெவாப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். வெள்ளிக்கிழமை போலீசார் அவரைக் கைது செய்து, அவரது மொபைல் போனைப் […]

மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மிக பயணம் ஜூலை 18-ம் தேதி தொடக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான அம்மன் கோவில்களுக்கு அரசே உங்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களை ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம், ஜூலை […]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பழுதடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 10ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கிலிகுப்பத்தைச் சேர்ந்த இளங்கோவன், சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி சரிதா, 16 வயது மகன் வெற்றிமாறனை வளர்த்து வந்தார். ஆம்பூர் பகுதியிலுள்ள அரசு […]

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற […]

அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் நாளை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் […]