தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வாக்குறுதி முரண்பாடுகளைக் கடுமையாக சாடினார். மக்கள் சார்பாக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கவே எதிர்க்கட்சியாகத் தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பழிபோடும் தந்திரங்களில் ஈடுபடாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2024-ம் ஆண்டை விட 2025-ல் வழிப்பறி, திருட்டு, கொலை, கலவரம், […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்க முதல்வர் நன்றாக தயாராகி வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால், நீங்க யாரும் ஓடிவிடக்கூடாது என்று முதல்வர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மிதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் […]
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் தோல்வி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் […]
இன்றைய நவீன இயந்திர வாழ்க்கை பயணத்தில் பெரும்பாலான மனிதர்களை அச்சுறுத்தும் ஒரு பொதுவான பிரச்சனையாக மன அழுத்தம், பதற்றம் மற்றும் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் உருவெடுத்துள்ளன. இத்தகைய அகப் போராட்டங்களுக்குச் சிறந்த மருந்தாகவும், நலிந்த மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் இடங்களாகவும் நம் முன்னோர்கள் வடிவமைத்த திருத்தலங்கள் விளங்குகின்றன. கோயில்கள் என்பவை வெறும் கற்களாலும் சுண்ணாம்பாலும் எழுப்பப்பட்ட கட்டடங்கள் மட்டுமல்ல; அவை பல நூற்றாண்டுகளாக இறைமந்திரங்களின் அதிர்வுகள் நிறைந்த, நேர்மறை ஆற்றலை […]
தமிழ்நாட்டில் உள்ள பழமையான திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் தமக்கே உரிய தனித்துவமான புராணப் பின்னணியையும், கண்களை வியக்க வைக்கும் சிற்பக்கலை மற்றும் ஆகம அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளன. ஆன்மிக அன்பர்கள் மெய்சிலிர்க்கும் தமிழக கோயில்களின் தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம். விரற்கடை உயர லிங்கம் (தேனுபுரீசுவரர் கோயில்): செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள இத்தலத்தில், மூலவர் தேனுபுரீஸ்வரர் வெறும் ஒரு ஜான் உயரமும், மூன்று விரற்கடை கனமும் கொண்ட மிகச் சிறிய […]
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்களை சென்னைக்குக் கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சர்வதேசத் தொடர்புகொண்ட அதிர்ச்சி கும்பலை சென்னை பெருநகரக் காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதியில் வேகமாக சென்ற ஆட்டோ ஒன்றில் இருந்து, 17 வயது சிறுமி ஒருவர் “என்னை காப்பாற்றுங்கள்” என்று கூச்சலிட்டபடி தப்பிக்க முயன்றார். இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சின்ன காசம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மாயழகன் என்பவரது மனைவி சசிகலா (32). இவர் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ‘FQL’ ஆன்லைன் நிதித் திட்டத்தில், ஒரு சீட்டுக்கு ரூ.50,000 வீதம் மூன்று சீட்டுகளுக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். மேலும், தனது உறவினர்கள் சிலரையும் இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், FQL நிறுவனம் பண […]
தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 2) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கட்சியின் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை அவர் டெல்லி சென்றிருந்தார். அங்கு தங்கியிருந்த சூழலில், நேற்று அதிகாலையில் அவருக்குத் திடீரெனத் தலைச்சுற்றல் […]
வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை விலங்குகள் மற்றும் பறவைகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என மாநில வனத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மைக்காலமாக மக்காவ், பஞ்சவர்ணக் கிளி போன்ற அரிய வகை பறவைகள் மற்றும் லீமர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பதும், வணிக ரீதியாக விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இவற்றை தங்களின் வீடுகளில் வளர்த்து வரும் உரிமையாளர்களும், விற்பனை செய்யும் வியாபாரிகளும் தங்கள் […]

