இலவச வீட்டு மனைப் பட்டா என்பது வெறும் நிலத்திற்கான சட்டப்பூர்வ உரிமை ஆவணம் மட்டுமல்ல. அது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள ஒரு குடும்பத்தின் எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளம் ஆகும். இந்த சட்டப்பூர்வ உரிமை கிடைப்பதால், ‘எப்போது வேண்டுமானாலும் காலி செய்ய சொல்லலாம்’ என்ற மன அச்சமின்றி மக்கள் பாதுகாப்பாக வாழ முடிகிறது. மேலும், பட்டா பெற்ற நிலத்தை கொண்டு, வங்கிகளில் எளிதில் வீட்டுக் கடன் பெற்று, அவர்கள் தரமான வீடுகளைக் […]

ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இலவச மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு rteadmission@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் ஆனைமலைப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் மாசாணியம்மன் திருக்கோயில், பக்தர்களுக்கு மன அமைதியையும், குறைகளுக்கான நீதியையும் வழங்கும் விசேஷ தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. சுற்றிலும் தென்னந்தோப்புகளும், மலைகளும் சூழ, இந்த கோயில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுடன் கூடவே, ஆழ்ந்த ஆன்மீக சூழலையும் அளிக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மனக்குறைகளை தீர்க்கும் நம்பிக்கையுடன் இத்தலத்திற்கு வந்து அம்மனை மன்றாடுகின்றனர். இங்கு அருளும் […]

12-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக […]

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.. இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டியையை ஒட்டி சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், 22 வயதான கார்த்திகா தேவிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. துபாயில் பணிபுரியும் கண்ணன், தனது மனைவியுடன் இரண்டு மாதங்கள் அங்கு உல்லாசமாக சுற்றுப்பயணம் செய்துவிட்டு, அவரை சேலத்தில் உள்ள குடும்பத்துடன் விட்டுச் சென்றார். பின்னர், கண்ணன் மீண்டும் பணி நிமித்தமாக துபாய் செல்ல, தனிமையில் இருந்த கார்த்திகா தேவி, தனது கல்லூரி காதலனான […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேடு, இந்திராநகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் அதே பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (40). சமீபத்தில் இவர்கள் உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியபோது, வீட்டின் முன் ஜன்னல் வழியாக விபூதி தூவப்பட்டிருப்பதைக் கண்டு ஆர்த்தி அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகமடைந்த கணவர் ராஜா, வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ராஜாமணி […]