திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்த இளங்கோவன் (40) என்ற லாரி கிளீனருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை சாலையோரம் தங்கியிருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் உறவு, கொலையில் முடிந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இளங்கோவன், மாதுவுடன் பழகி வந்த நிலையில், அவரை தனது வீட்டிற்கே அழைத்து வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று, மாது நீண்ட […]

2025-26 ஆம் நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து கலைஞர் கனவு இல்லம் கட்டி முடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் […]

கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்துக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே, நவம்பர் 1-ம் தேதியிலிருந்து வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள், தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் […]

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (25). இவர், திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் டில்லிபாபு பணிபுரியும் நிறுவனத்திற்கு 2 நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் டில்லிபாபுவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த […]

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து […]

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மூத்த மகள் மீனாட்சி (23), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான ஆணுடன் மீனாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். மகளின் எதிர்காலம் குறித்து கவலையடைந்த மீனாட்சியின் பெற்றோர், இந்தத் தொடர்பைக் கைவிடுமாறு தங்கள் மகளைக் கண்டித்துள்ளனர். மேலும், அந்த ஆண் நண்பரையும் […]

தவெக பொதுக்குழு கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களுக்கு, வணக்கம்‌. நம்‌ அரசியல்‌ பயணத்தில்‌ அர்த்தம்‌ பொதிந்த ஓர்‌ ஆழ்நீள்‌ அடரமைதிக்குப்‌ பிறகு, உங்களோடு பேசவும்‌ உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம்‌ இது. சூழ்ச்சியாளர்கள்‌, சூதுமதியாளர்கள்‌ ‘துச்சமாக எண்ணி நம்மைத்‌ தூறு செய்த போதினும்‌, அச்சமின்றி அத்தனையையும்‌ உடைத்தெறிந்துவிட்டு நம்‌ […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தென்காசியில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர் தென்காசிக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மக்களை மகிழ்க்கவும், காக்கவே, இந்த ஆட்சி, மக்களை வளர்க்கவும், மக்களுக்கு கொடுக்கவுமே இந்த ஆட்சி.. இந்த நான்கையும் 4 ஆண்டுகளாக செய்து வருகிறோம்.. திமுக அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் […]