ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 3 வாலிபர்களால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது காதலனுடன் தெங்கால் பாலாறு மேம்பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறி வருகின்றனர்.. குறிப்பாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் […]

தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண […]

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரையில் நடந்த 2-வது மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், மக்களை சந்திக்க தயாராகி வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருக்கும் விஜய், இதற்கான அனுமதியை பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திருச்சிக்கு வந்தார். அப்போது, அவரை வரவேற்க ஏராளமான […]