பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச் சீட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என […]

கிருஷ்ணகிரி மாவட்டம் போயர் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநரான ராஜதுரை (30), கல் குவாரியில் வேலை செய்தபோது ஏற்பட்ட தகாத உறவு, பின்னாளில் பணப் பிரச்சனையாக மாறி, கொலை மிரட்டல் மற்றும் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. மாந்தோப்பு ஒன்றில் ராஜதுரை மீது நடந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு (நவம்பர் 4) மாந்தோப்பில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ள […]

தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்ததாகவும், 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.. மேலும் “ இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. […]

மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நம் சொந்தங்களை இழந்ததால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தோம்.. வேதனையில் அமைதி காத்த போது தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் வலைப்பின்னப்பட்டது.. சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அவற்றை துடைத்தெறியப் போகிறோம். தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக கொடுக்கப்பட்ட உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. […]

கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் சமீபத்திய தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த, பாதுகாப்பான பொதுக்கூட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு, அமைதியற்ற குழப்பமாக மாறி, பல அப்பாவி உயிர்களை காவு கொண்டது. இதனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே தளர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் இன்னும் நீதி கேட்டு வருகின்றன. அதேசமயம், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விஜய்யின் தவெக இரண்டு கட்சிகளிடமும் மக்களின் […]

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த  தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. முதல் தீர்மானமாக கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. […]

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று பிஎம் கிசான் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 21-வது தவணை விரைவில் வெளியாகவுள்ளது. மத்திய அரசின் கடுமையான எச்சரிக்கையின்படி, இம்முறை கேஒய்சி (KYC) செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதி கிடைக்காது என்பதுடன், அவர்கள் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. […]

தமிழ்நாட்டையே உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த அதிர்ச்சி நீங்குவதற்குள், தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெய்வச்செயல்புரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை காட்டுப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நேற்று பிற்பகல் தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த அப்பெண் தனது தோட்டத்திற்கு களை எடுக்கும் வேலைக்குச் சென்றுவிட்டு […]