சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிரட்டலால் விமான நிலையத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் […]

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியில், திருமணமான 4 மாதத்தில் மனைவியை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) மற்றும் மதுமிதா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த இளம் தம்பதியின் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (30) என்பவருக்கும், பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சண்டைகள் தீவிரமானதால், மகாலட்சுமி 4 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் […]

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தங்கத்தை அவசர தேவைகளுக்கான முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் குறையவில்லை. தேவைப்படும்போது உடனடியாகப் பணமாக மாற்ற முடியும் என்பதாலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதாலும், தங்க நகைக்கடனுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில் ஆவணங்களோ, அதிக சிக்கல்களோ இல்லை என்பதால், சாமானியர்கள் தங்க நகைக்கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். தேசிய […]

2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 1,270ஆக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர். வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது […]

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு தலைமை காவலர் (ஏட்டு), புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஒன்றில் புகார் அளிக்க இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த […]

கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கி உள்ளது. கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை 5 நாள் (2026 பிப்ரவரி 9 முதல் 13 வரை) நடத்தவிருப்பதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இந்தப் படிப்பு, துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சார் தொழில்துறை ஆகியவற்றில் அத்தியாவசியமான உத்திசார்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுடன் ஊழியர்களைத் தயார்படுத்தவும் மற்றும் புதிதாக வேலை தேடுவோருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணி செய்வோருக்கு […]