சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மோட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (36). எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்த இவருக்கு மாராயி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிவகுமாரின் மனைவி, ஏற்காடு மருதயாங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தோஷ் என்பவருடன் சுமார் இரண்டரை ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் சிவகுமாருக்குத் தெரியவர, கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் காவல் நிலையம் வரை […]

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது வரை 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. இத்திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள் அல்லது புதிதாக தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிப்பதற்காக வரும் நவம்பர் மாதம் வரை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் […]

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் […]

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையின்போது, கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மின்னல் தாக்கிப் படுகாயமடைந்தனர். கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆத்தூர், ஏரல், முக்காணி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய […]