நம் கனவுகள் எப்போதுமே புதிரானவை. சில கனவுகள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும். சில கனவுகள் நம்மை குழப்பி, ஆழமான சிந்தனையிலும் பயத்திலும் வைத்திருக்கும். குறிப்பாக, ஆன்மீகம் தொடர்பான கனவுகள் வந்தால், அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்வதில், நம்மில் பலரும் ஆர்வமாக இருப்போம். அந்த வகையில், அழகு, ஆன்மீகம் மற்றும் கடவுள் முருகனின் வாகனமாக கருதப்படும் மயில், உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்..? இது நல்ல சகுனமா..? அல்லது […]

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் என்பது அரசு வழங்கும் ஒரு சட்டபூர்வமான ஆவணமாகும். இது, ஒருவர் சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு தகுதியானவர் என்பதற்கான அங்கீகாரமாக செயல்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள், பேருந்துகள் என எந்த வகையான வாகனமாக இருந்தாலும், அதை சாலையில் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமைந்துள்ளது தும்பலப்பட்டி கிராமம். இங்கு செயல்பட்டு வரும் ஒரு தனியார் செங்கல் சூளையில் நடந்த கொலை சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செங்கல் சூளையில் கணக்காளராக பணியாற்றி வந்த 23 வயதான சரவணன், சம்பவத்தன்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் அங்கு கிராம மக்களும் ஒன்று […]

உள்நோக்கம் இன்றி ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது என்பது குற்றமாகாது என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ஆம் ஆண்டில், நெடுங்குளம் பகுதியில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணமாகாத பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான […]

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் கட்டைப் பையுடன் வந்த இளைஞர், “சாலையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு ஒப்படைக்க வந்தேன்” என்று பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர் கூறிய இடம் மற்றும் காரணம் குறித்து விசாரிக்க, இளைஞர் முன்–பின் முரண்பாடாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், அந்தக் குழந்தை தன்னுடையது என அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் ஊட்டியைச் சேர்ந்த […]