சென்னையில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சென்னையின் கொளத்தூர் பகுதியில், தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி தவறி விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விபத்தின் எதிரொலியாக சென்னை காவல்துறை சில […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கரூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசன், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி பென்சில் தமிழரசன் மீது ஏற்கெனவே திருட்டு, தாக்குதல், மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நடவடிக்கை எடுத்தனர். அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு […]
இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 27 மின்சார ரயில் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில், ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னை பயணிகளுக்கு புறநகர் […]
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்களுக்காக பிரபாகரன் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருந்தபோது, இலங்கையில் தமிழர்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருந்த போது, இங்க என் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு, குடித்துக்கொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு எல்லாத்தையும் பண்ணிட்டாரு. தலைவர் பிரபாகரனுடைய மகன் பாலச்சந்திராவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஒரு […]
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; 20.06.2025 (வெள்ளிக்கிழமை) 21.06.2025 (சனிக்கிழமை) , 22.06.2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு […]
நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் […]
சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவர்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் உயர்க்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கர்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கர்வகளும் உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மேற்கொண்டு உயர்க் கல்வி […]
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மாணவர்கள் ஜூன் 23 முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் […]
ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் தாமதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்காலத்துக்கு அகத்தணிக்கை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். தணிக்கை பெற்ற நிலையில் ஓய்வு பெற்றவர்கள் […]
The TVK has warned the BJP government that Tamil and Tamil civilization are like volcanoes and should not be used in vain.

