கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடைபெற்ற கொடூரமான குழந்தை கொலை சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்று வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து கொலை செய்ததற்காக ஒரு நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது தாயுடன் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். குழந்தையின் மரணத்தில் உறவினர்களுக்கு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
The Madras High Court has ordered an interim stay on the Enforcement Directorate from taking further action against film producer Akash Bhaskaran.
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. 62 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. முன்னதாக […]
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை […]
சொத்து விவகாரத்தில் கலாநிதி உள்ளிட்டோருகு நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாநிதி, தற்போது டிவி சேனல்கள் கைசென்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ச் அணி உரிமத்தை ரத்து செய்ய கோர போவதாக கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன். திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரரும் ஊடக அதிபருமான கலாநிதி மாறனுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த […]
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21 முதல் 25-ம் […]
தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மூலம் இந்த நியமனங்களை மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான காரணம் என்னவென்றால், அரசு பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, 10 […]
வீடு, மனைகளை விற்பனை செய்யும் புரோமோட்டர்கள் ரியல் எஸ்டேட் அனைத்தும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதை காட்சிபடுத்தும் வகையில் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016, குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களின் வாங்குபவர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையைக் […]
2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக […]

