தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ..74,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில […]

தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி வனக்கோட்டத்தில் ஒகேனக்கல் நீர்பிடிப்புப் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி மற்றும் இதர மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதேபோல அதிக அளவில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள். மயில்கள், பன்றிகள் […]

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் திரைப்படம் மதராஸி, செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், விக்ராந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தை ஶ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தான், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. […]

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தகுதியும், நிதிசார்ந்த ஆதரவும் வழங்கும் வகையில், மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026 கல்வியாண்டுக்கான புதியதும் புதுப்பித்தலும் செய்ய வேண்டிய கல்வி உதவித்தொகை (scholarship) திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), மேலாண்மை கழகங்கள் […]

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். தவிர, மேற்கு திசை காற்றில் […]

பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும். அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் […]

1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]