சென்னை அருகே பிரபல ரவுடியை மனைவியின் கண்முன்னே சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே மறைமலை நகரின் தைலாவரம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர் (28). இவர் கஞ்சா , கொலை வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியாவார். பல கொலைகளில்தொடர்புடையதால் இவருக்கு எதிரிகள் அதிக அளவில் இருந்துள்ளனர். இதனால் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகர் தைலாபுரத்தில் மாமியார் […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துவதில் என்ன தவறு உள்ளது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ’’குண்டு வீச்சு சம்பவமும் ,வன்முறை சம்பவங்களும் நடைபெறக்கூடாது, எந்த மாநிலமாக இருந்தாலும் சரி பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு மாநிலத்தில் சமய […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பா. ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கருமன் கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் பா.ஜனதா ஆதரவாளரான கல்யாண சுந்தரம் (55) என்பவரது வீட்டில் கடந்த 24 ஆம்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு […]
கூடுதலாக 100 ரூபாய் கூலி பெற்றதால் சக நண்பர்கள் ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கட்டிடத் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் 10வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 22 வயது ஆனந்தன் என்பவர் கட்டிட வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், பிரசாந்த் , […]
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள சாணாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் ( 48). இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 1 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் (12). இந்த நிலையில், தன்னையும், மகனையும் கவனித்து கொள்ள 2வதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்துள்ளார். இதன் […]
மாணவர்கள் ஆன்லைனில் கேம்விளையாடி அடிமையாகின்றனர் இதனால் ஆன்லைன் கேமுக்கு தடை செய்ய வேண்டும் என்ற தாயிடம் ஆன்லைன் கேம்ஸை தடை செய்வது சாத்தியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் அதிகமாக ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானர் எனவும் ஆன்லைனில் கேம்விளையாடிக்கொண்டே ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் […]
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, […]
புதுச்சேரியில் 4 பேருந்துகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி உடைக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக எம்.பி. ஆராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்து அமைப்புகள் ஏற்கனவே முழு அடைப்பை தொடங்கிவிட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் 4 தமிழக பேருந்துகளை கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக […]
ஆவின் பால் பதப்படுத்தும் நிலையத்தில் பால் பாக்கெட்டுகளை ஊழியர்கள் திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் பால், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில், […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.. இதனால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாரு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. நேற்று முதல் கடுமையான […]