புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் அட்டை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பத்திரப்பதிவுப் பணிகள் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநிலப் பத்திரப்பதிவுத் துறையின் மைய தரவு சேமிப்பு வன்பொருளில் (Server Hardware) கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறுதான் இந்த முடக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைன் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்வது, வில்லங்கச்சான்றிதழ் பெறுவது மற்றும் சொத்துப் பரிமாற்ற பதிவுகள் […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் எடுத்து வரும் அதிரடி அரசியல் நகர்வுகள், திராவிடக் கட்சிகளின் கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியில் பங்கு” என விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் வீசிய அதிகாரப் பகிர்வு அஸ்திரம், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் முறையையே புரட்டிப் போட்டுள்ளது. தற்போது தவெக-வை நோக்கி திரும்பியுள்ள முக்கிய கவனிப்பு என்னவென்றால், […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 5,000 ரொக்கம் வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளை […]
திராவிட இயக்கத்தின் மூத்த தூண்களில் ஒருவரும், ‘மொழிப்போர் தளபதி’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் (92), வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்த இந்தத் செய்தி, திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல். கணேசன், பேரறிஞர் அண்ணா மற்றும் […]
தமிழ் சினிமாவின் ‘இமயமலை’ என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த பாரதிராஜா, சமீபத்தில் சென்னை திரும்பிய நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாத இறுதியில் மூச்சுவிடுவதில் ஏற்பட்ட […]
தமிழர்களின் பாரம்பரியப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு, தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 4) காலை 8 மணி முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். ஏற்கனவே […]
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தொடர்கதையாகி வரும் பேருந்து விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் இத்தகைய கோர விபத்துகளில் அப்பாவிப் பயணிகள் உயிரிழப்பது வேதனையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு தனியார் பேருந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கரூர் நோக்கி 16 பயணிகளுடன் ஒரு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தப் […]
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிலவும் அரசியல் சூழல் குறித்து, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ. (IDPI) நடத்திய விரிவான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த 61-வது கள ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் விளக்கினார். இந்த ஆய்வின்படி, அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு, 55 சதவீத மக்கள் மீண்டும் மு.க.ஸ்டாலினுக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

