கொலை செய்வதில் யார் கில்லி என்ற தகராறில் ரவுடியை கொலை செய்து புதர்மண்டிய பாழுங்கிணற்றில் வீசிய குடிகார கூட்டாளிகளை 6 மாதம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் வடக்கு தெருவைச் சேர்ந்த குண்டாஸ் ரவுடி பாலமுருகனின் மகன் சீமான். பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஊதாரியாக சுற்றித்திரிந்த சீமான் மீது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றது உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக […]

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் மீது 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக லோகேஷ் என்பவர் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை அடுத்த போதமலை மலைப்பகுதியில் கீழூர் மேலூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2016ல் இங்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் மின்மாற்றியில் சமீபத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி அம்மக்கள் தவித்தனர். புதுப்பட்டி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்த போது பழுதடைந்த மின் மாற்றியை மலைப்பகுதியில் இருந்து கீழே இறக்கி வருமாறு மக்களுக்கு அவர்கள் தெரிவித்ததாக […]

தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை- டூ -கோவை மற்றும் சென்னை- டூ -மைசூரு ஆகிய ரூட்களிலேயே அந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வந்தே பாரத் ரயில்களுடன் விரைவில் இன்னும் சில புதிய வந்தே பாரத் ரயில்கள் இணைக்கப்பட உள்ளன. அதில் ஒன்றே சென்னை-விஜயவாடா இடையில் இயங்க இருக்கும் புதிய வந்தே பாரத் ரயில் ஆகும். இது […]

கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 188 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை […]

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட 5 அருவிகளில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 […]

ராமேஸ்வரம்-ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் –பாலக்காடு தினசரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோயில் – எஸ்எம்விடி பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ராசிபுரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு பரிசோதனை அடிப்படையில் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி 2023 இன்று ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இணையமைச்சர் எல் முருகன்  ஓகா-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் […]

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொல்லப்படும் இந்த சங்கமானது, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது ஆவின் என்ற வணிகப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பில் தற்போது காலி பணியிடங்கள் இருப்பதால் அதற்கான ஆள் சேர்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். அதற்கான விவரங்கள் என்ன என்பது குறித்து தற்போது நாம் பார்க்கலாம். நிறுவனத்தின் பெயர்: […]

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 330 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி, வருகின்றன. இவற்றில்‌ தற்போது 2023-2024-ம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்‌ சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ அரசு ஒதுக்கீட்டு இருக்கைகளின் சேர்க்கைக்கான ஒதுக்கீடு விவரங்கள்‌ 10.07.2023 அன்று வெளியிடப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்‌ தற்போது முன்கூட்டியே www.skilltraining.tn.gov.in என்ற […]

தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது. தன்னாட்சியை பெற கல்லூரிகள்‌ தொடர்ந்து 10 ஆண்டுகள்‌ செயல்பட்டு இருக்க வேண்டும்‌. முந்தைய 5 ஆண்டுகளில்‌, முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில்‌ 60 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருக்க வேண்டும்‌ என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி நிறுவனத்தின்‌ h-index குறியீடு 10-ல்‌ இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய 3 ஆண்டு […]