இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரியின் கெரி செக்டரில் உள்ள பாரத் காலா பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் பதுங்கியுள்ள 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். காலை 8 மணி முதல் 9 மணி வரை, பாரத் காலா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை இந்திய ராணுவம் கண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊடுருவல் முயற்சி கண்டறியப்பட்டவுடன், […]
நீண்ட நாள் குழப்பத்திற்குப் பிறகு, இஸ்ரேலும் ஈரானும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டன. இஸ்ரேல் தனது படைகளைத் திரும்ப அழைத்துள்ளது, அதே நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைப் பின்பற்ற ஒப்புக்கொண்டது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான உணர்வுகள் பரஸ்பரம்; எதிர்காலத்தில் அவர்களில் யாராவது ஒருவர் போர் நிறுத்தத்தை மீறினால், போர் மீண்டும் தொடங்கும். ஆனால் இப்போதைக்கு அது அமைதியாக இருக்கிறது, ஆனால் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்துவிட்டதா? இல்லை! […]
மூன்று மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக சென்றதால் ஒரு பெண் போக்குவரத்து காவலர் அவர்களை இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் முக்கிய சாலையில், ஸ்கூட்டரில் வேகமாகவும், சட்டவிரோதமான முறையில் மூன்று பேர் ஒரே வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து காவலராக பணியாற்றும் பிரணிதா முஸனே என்ற […]
கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), நாடு தழுவிய விமான நிலைய பாதுகாப்பு தணிக்கையை தொடங்கியுள்ளது. இது மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட, DGCA அறிக்கையின்படி, அகமதாபாத் விபத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் ஆபத்தான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மங்கிபோன […]
SSC Combined Graduate Level (CGL) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 14,582 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 7 முதல் ஏற்கப்படும். ஜூலை 9 முதல் 11 வரை திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். Tire-1 தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 தேதிகளிலும், Tire-2 தேர்வு டிசம்பரிலும் நடைபெறும். மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), ஜூன் 9, 2025 அன்று SSC CGL […]
`வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இந்த இரண்டையும் அதிக கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். கல்யாணம் என்பது காலம் காலமாகவே மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட்டு வருகிறது. இருவீட்டாருக்கும் பிடிக்க வேண்டும், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் பிடிக்க வேண்டும். எல்லாமே கைகூடி வந்தால்தான் அடுத்தகட்டமாக திருமணமே நடக்கும். ஆனால் திருமண வயதில் உள்ள மணமகன்கள் அனைவரும் ஒரு சந்தையில் விற்கப்பட்டால் எப்படி இருக்கும்…? பீகார் […]
வருங்கால வைப்பு நிதி(PF) சந்தாதாரர்கள், இப்போது அவசரகாலங்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மேலும் கோரிக்கை 72 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார். இது முந்தைய அவசரகால பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், கோரிக்கை செயல்முறையை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும், மேற்கொள்ளப்படும் பரந்த சீர்திருத்தங்களின் […]
வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவின் ரயில் பயணம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அவசரகால கொள்முதலுக்காக 28 ஆயுத அமைப்புகளை வழங்கியுள்ளது. ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையின் தன்னம்பிக்கை உந்துதல் (Aatmanirbhar Bharat) நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் […]