ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திற்கு அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் பேருந்து தீபிடித்து எரிந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காவேரி டிராவல்ஸ் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில், காலை 3 மணி அளவில் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே சென்றுக்கொண்டிருந்த மீது இருசக்கர வாகனம் […]

பீகாரைச் சேர்ந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கூட்டணி ‘கத்பந்தன்’ அல்ல, மாறாக ‘லத் பந்தன்’ (குற்றவாளிகளின் கூட்டணி) என்று கூறினார். ஏனெனில் டெல்லி மற்றும் பீகாரைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்று சாடினார்.. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தங்களுக்குள் சண்டையிட மட்டுமே தெரியும், மேலும் அவர்களின் சுயநலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய […]

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 122 குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் 14 பேர் கார்பைடு துப்பாக்கிகள் என்று அழைக்கப்படும் வெடிக்கும் சாதனங்களால் பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 18 அன்று மாநிலம் தழுவிய தடை விதிக்கப்பட்ட போதிலும், உள்ளூர் சந்தைகள் இந்த கச்சா, தற்காலிக சாதனங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ரூ.150-200க்கு விற்கப்படும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட கேஜெட்டுகள் பொம்மைகளை போலவே […]

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தில், விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவியை அவரது தாத்தாவாக நடித்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிந்து மாதவ் கரிகாபதி அளித்த தகவலின்படி, டி. நாராயண ராவ் என்ற அந்த முதியவர், அரசுப் […]

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்கொண்டனஹள்ளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 27 வயதான அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள், நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அந்தக் கும்பல், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரை மிரட்டி […]

பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன், விஐபி தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த முடிவை வெளியிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், ஆளும் NDA மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார்.. […]

விமான கேபின்களுக்குள் புகை மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பயணத்தின் போது பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியாக உள்ளது.. இது குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசித்து வருகிறது. விமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இறுதி செய்வதற்கு முன், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உலகளாவிய விமான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து […]

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பல நாட்கள் ஊகங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய அழுத்தத்தின் பேரில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் […]

நாடு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8-வது ஊதியக் குழுவின் உருவாக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், மேலும் அது தொடர்பான ஒவ்வொரு அப்டேட்க்காகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். 2025 ஜனவரியில் 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்தை அரசாங்கம் அங்கீகரித்த போதிலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை, அல்லது ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. ஒரு கோடி ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்கள் காத்திருப்பு தீபாவளிக்குள் 8-வது ஊதியக்குழு […]

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் புஷ்பா (30), தனது காதலனும் சக யூடியூபருமான சந்தீப்பால் (32) கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டி வந்த புஷ்பா, தனது கணவரை விட்டுப் பிரிந்து ஹர்ஷனா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்புடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் இணைந்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில், புஷ்பா […]