கர்நாடகாவை சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, சாந்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். சமூக வலைதளங்களில் அதீத ஆர்வம் கொண்ட மோனிகா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், சமூக வலைதளம் வாயிலாக ராகவேந்திரா என்ற காவலருடன் மோனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. தனது போலீஸ் […]

2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், தயவு செய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள்.. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால், PIB Fact Check பொதுவாக இதுபோன்ற நிதி உதவி குறித்த […]

உத்தரப்பிரதேச மாநிலம், பராபங்கி மாவட்டத்தில் உள்ள சஹாவ்பூர் கிராமத்தில், சந்தீப் என்பவரது வீட்டில் நேற்று காலை 31 வயது மம்தா என்ற பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில், இறந்து கிடந்தவர் கோரக்பூரைச் சேர்ந்த மம்தா என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்தது. மம்தாவுக்கும் சந்தீப்புக்கும் இடையே கள்ள உறவு இருந்து வந்துள்ளது. ஆனால், சந்தீப்புக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் […]

பிரதமரின் சூரிய சக்தி வீடு, இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் 7.7 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் இல்லாமல் செய்துள்ளது. மத்திய அரசு பிப்ரவரி 2024-ல் பிரதமரின் சூரிய சக்தி வீடு: இலவச மின்சாரத் திட்டத்தை அறிமுகம் செய்தது. 2026-27 நிதியாண்டிற்குள் ரூ.75,021 கோடி செலவில் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய சக்தி மின்தகடுகள் நிறுவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். 09.12.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் […]

மருந்துகளை பரிந்துரைக்கும்போது மருத்துவர்கள் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்துமருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மருத்துவர்கள் மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை மருத்துவ பாடத் திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக […]

பீகார் தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பணியின் 2-ம் கட்ட செயல்முறையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.. அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை மாநிலங்களில் தொடங்கி நடைபெற்றது. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, […]

வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிக் கொண்டதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட மிகக் குறைந்த பார்வைத் திறனுக்கு மத்தியில், இந்த விபத்து விரைவுச்சாலையின் ஆக்ரா-நொய்டா […]

உலகம் முழுவதும் தேநீர் குடிப்பவர்களின் எண்ணிக்கை காபியைப் போலவே பெரியது. சிலருக்கு, தேநீர் என்பது வெறும் பானம் மட்டுமல்ல, அது ஒரு ஆற்றல் பானம்.. தேநீர் அருந்தவில்லை என்றால் ஓட முடியாது என்று கூட அவர்கள் கூறுகிறார்கள். உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு தேநீர் வழங்குவதும் ஒரு பாரம்பரியம். ஆனால் இந்தியாவின் விலை உயர்ந்த தேநீர் எது தெரியுமா? தேயிலைத் தூளுக்கு உலகம் முழுவதும் பிரபலமான அசாமின் மனோகரி கோல்ட் […]

காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தேசிய ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகாரை டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த புகார் ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று […]