நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் (பிஓடி) மாதிரியின் கீழ் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிகளின்படி, நெடுஞ்சாலையின் எந்தவொரு பிரிவிலும் ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டால், அந்தத் திட்டத்தின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான ஒப்பந்ததாரர்கள் நேரடியாகப் பொறுப்பாவார்கள். […]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4ஆம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நவம்பர் 1 மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் பெயர் அமய்ரா என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை […]

பணமோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் (Reliance Anil Ambani Group) தொடர்புடைய நிறுவனங்களின் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.. இந்த உத்தரவு 2025 அக்டோபர் 31 அன்று, பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) பிரிவு 5(1) அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. முடக்கப்பட்ட […]

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டியில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.. 18 பேர் காயமடைந்தனர். செவெல்லா அருகே தெலுங்கானா சாலை போக்குவரத்துக் கழக (RTC) பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, டிப்பரில் இருந்த சரளைக் கற்கள் பேருந்தின் மீது விழுந்தன. மோதிய பிறகு பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. […]

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிர்சாகுடா அருகே நடந்த ஒரு விபத்து மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தண்டூர் பணிமனையைச் சேர்ந்த ஆர்.டி.சி. பேருந்து ஒன்று, ஜல்லிக் கல் பாரம் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் லாரியில் இருந்த ஜல்லிக் கல் முழுவதுமாகப் பேருந்தின் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பல பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த […]

புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் அருகே பாண்டி மெரினா செல்லும் சாலையில் நேற்று இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் விசாரணையில், கொலையானவர் ரெட்டியார்பாளையம் […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மையமாக விளங்கும் ஒருங்கிணைந்த UPI சேவையின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு முக்கிய விதிமுறையை அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிகள் நவம்பர் 3ஆம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. தற்போதுள்ள நடைமுறையில், ஒரு நாளில் 10 செட்டில்மென்ட் சுழற்சிகளில் வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த/ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ஒரே நேரத்தில் கையாளப்பட்டன. மாதந்தோறும் பில்லியன் […]

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் அலிகர் பகுதியைச் சேர்ந்த அமித் குமார், தனது மனைவி ரூபி மற்றும் 3 குழந்தைகளுடன் கர்ஹி சௌகாண்டி கிராமத்தில் வாடகைக்கு வசித்து வந்தார். அதே பகுதியில் ராகுல் (36) என்பவரும் வாடகைக்கு தனியாக வசித்துள்ளார். ரூபியும் ராகுலும் ஒரே தொழிற்சாலையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்துள்ளனர். இதனால், ராகுல் தினமும் ரூபியைத் தனது பைக்கில் தொழிற்சாலையில் இருந்து ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, தினமும் காலையிலும் மாலையிலும் அமித்தின் […]

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வதி அச்சு (39) என்ற இளம்பெண், ‘ஹனிடிராப்’ (Honeytrap) என்னும் வலையை விரித்து 300-க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி, வீடியோக்களை எடுத்துக் கொண்டு லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் குறிவைத்து இவர் பல தந்திரங்களை மேற்கொண்டதாகவும், 2.5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தித் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி […]