உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே ராங் கால் (தவறான அழைப்பு) மூலம் உருவான ஒரு கள்ளக்காதல் சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2023இல், சோனம் (30) என்ற திருமணமான பெண், தவறுதலாக ஒரு தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுப் பேசிய மசீதல் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சோனமின் கணவர் மாநிலத்திற்கு வெளியே பணிபுரிந்த நிலையில், நாளடைவில் இவர்களின் பேச்சும் பழக்கமும் […]

நுகர்வோர் விலைக் குறியெண் தொகுப்பில் இலவச பொது விநியோகத் திட்டப் பொருட்களின் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் அறிக்கை 2.0 வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், நுகர்வோர் விலைக் குறியெண்ணின் (CPI) அடிப்படைத் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறையில், விலை சேகரிப்பின் பரப்பை அதிகரித்தல், தற்போதுள்ள வழிமுறைகளைச் செம்மைப்படுத்துதல், புதிய தரவு மூலங்களை ஆராய்தல் மற்றும் விலை சேகரிப்பு மற்றும் குறியீட்டுத் தொகுப்பில் நவீன தொழில்நுட்பத்தை திறம்படப் […]

இந்திய ரிசர்வ் வங்கியானது தங்க நகைக் கடன் விதிமுறைகளில் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள், தங்கக் கடன் சந்தையில் சில சவால்களையும் உருவாக்கியுள்ளன. கடன் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் : வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) இனிமேல் தங்கம் வாங்குவதற்காக கடன் வழங்க முடியாது. அதாவது, நகை, நாணயம், தங்கப் பத்திரங்கள் அல்லது பரஸ்பர […]

மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு 2022 முடிவுகளை விளம்பரங்களில் தவறாக சித்தரித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணி தேர்வு 2022 முடிவுகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக த்ரிஷ்டி ஐஏஎஸ் (விடிகே எடுவெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தத் தேர்வில் 216+ […]

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கீதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், கீதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில், கீதா தனது கள்ளக்காதலன் திலீப்பை வீட்டுக்கே வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சமீபத்தில் இவர்களது தொடர்பு குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்த விஜய், தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும், கீதா அந்தத் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமணமான பெண்ணுக்கு அவரது கணவரால் நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு சையத் இனமுல் ஹக் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது, வரதட்சணையாக 340 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகுதான், தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், தான் அவரது இரண்டாவது மனைவி என்றும் அந்தப் பெண்ணுக்குத் […]

துர்கா பூஜை பண்டிகையின் போது துர்கா தேவியின் சிலையை வைப்பதற்காக பந்தல் போன்ற தற்காலிக இடம் அமைக்கப்படும்.. மூங்கில், துணி மற்றும் பிற பொருட்களால் இந்த இடங்கள் அமைக்கும்.. இவை, பெரும்பாலும் கோயில்களை ஒத்திருக்கும். துர்கா பூஜை பந்தல்கள் அவற்றின் படைப்பாற்றல், பக்தி மற்றும் கலைத்திறனுக்கு பெயர் பெற்றவை, பெரும்பாலும் பக்தர்களை தனித்துவமான கருப்பொருள்களால் மயக்குகின்றன. இருப்பினும், மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் ஒரு பந்தல், ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்த […]

ராஜஸ்தானில் கலப்பட இருமல் சிரப் தொடர்பான நெருக்கடி மேலும் அதிகரித்தது. உள்ளூர் மருத்துவர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை சாப்பிட்ட சிகார் பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்தனர். இருவரும் ஜெய்ப்பூரின் ஜே.கே. லோன் மருத்துவமனையின் ஐ.சி.யூவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 16 ஆம் தேதி குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதாகவும், ஹதீதா ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு அவர்களுக்கு டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் அடங்கிய சிரப் […]

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், ரயில் பாதையைக் கடந்து சென்றுகொண்டிருந்த 4 சிறுவர்கள் மீது அதிவேகமாக வந்த ஜோக்பானி – தானாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (26301) ரயில் மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காஸ்பா மற்றும் பூர்ணியா ரயில் நிலையங்களுக்கு இடையே, வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) பிரிவின் கீழ் நடந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்த சிறுவர்கள், அருகிலுள்ள துர்கா பூஜை […]

வங்கி இயக்குநர்கள், பங்குதாரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் தங்களது உறவினர்களுக்குத் தாங்கள் பணிபுரியும் வங்கியில் அதிக அளவில் கடன் வழங்குவதாகவும், இந்தக் கடன்கள் பெரும்பாலும் வாராக்கடன்களாக மாறி மக்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அளவுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்படும் இத்தகைய கடன்களால் வங்கிகள் மீட்க முடியாமல் திணறுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தற்போது புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த […]