நமது நாட்டின் எதிர்காலத் தூண்களான பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அந்தக் கனவை நனவாக்க உதவும் திட்டங்களில் ஒன்றுதான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா). இந்த திட்டம் ஒரு சாதாரண சேமிப்புத் திட்டமாக மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை தபால் நிலையங்களில் தொடங்கலாம். பிரதமர் மோடியால் கடந்த […]

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலியாக, நாளை (செப்டம்பர் 22) முதல் வெண்ணெய், ஐஸ்கிரீம் மற்றும் பால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைத்து அமுல் அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அமுல் பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF), அதன் 700க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 22 […]

13,217 வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை ஐபிபிஎஸ் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. Office Assistants (Multipurpose), Officer […]

இந்திய தொழில்நுட்ப தொழிலாளர்களுக்கு பெரிய ஆறுதல் அளிக்கும் வகையில், H-1B கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர்களாக உயர்த்துவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு, புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே உள்ளவர்களுக்குப் பொருந்தாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். “நாட்டிற்கு வருகை தருபவர்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் அல்லது இந்தியாவுக்கு செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பு அவசரமாக திரும்பிச் செல்லவோ அல்லது $100,000 கட்டணத்தை செலுத்தவோ தேவையில்லை. $100,000 என்பது […]

திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15- ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணைய தளத்தில் அறிந்து […]

கூட்ட நெரிசல், தூய்மை மற்றும் உணவு தரம் போன்ற பிரச்சனைகளில் அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்ட இந்திய ரயில்வே, இப்போது ஒரு புதிய கவலையை எதிர்கொள்கிறது. ரயில்களின் பிரீமியம் பெட்டியில் இருந்து பொருட்களைத் ஒரு குடும்பத்தினர் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இது தொடர்பான ஒரு வைரல் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. புருஷோத்தம் எக்ஸ்பிரஸில் பயணிகள் இறங்கும்போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக வழங்கப்பட்ட படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து பாவ்நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய பிரதமர், தன்னம்பிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் “இன்று, இந்தியா ‘விஸ்வபந்து’ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி, ஒன்றாக நாம் இந்தியாவின் இந்த எதிரியை, […]

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வாலில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. தன்னை கடத்தி, சித்திரவதை செய்து, காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியதாக ஒரு நபர் கூறியுள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, பொதுமக்களின் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் தெஹ்ரி உயர் காவல்துறை அதிகாரி வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். செப்டம்பர் 16 ஆம் தேதி, குரான் கிராமத்தைச் சேர்ந்த கேசவ் […]

2016-ம் ஆண்டு 7-வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்னது.. 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.7,000-ஐ ரூ.18,000-ஆக மாற்றியது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.. 8-வது சம்பள கமிஷன்: இப்போது, ​​10 ஆண்டுகளுக்குப் பிறகு, 8-வது சம்பள கமிஷன் பற்றி விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை, ஒரு புதிய எண் புழக்கத்தில் […]