“ஆபரேஷன் வீட் அவுட்”- ன் கீழ் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 108.67 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் “ஆபரேஷன் வீட் அவுட்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் […]

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை கிட்டத்தட்ட 49,573 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கொசுக்களால் பரவும் நோயால் 42 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 2,33,519 டெங்கு பாதிப்புகளும் 297 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை டெல்லியில் 964 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு இதே […]

தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தகராறுகளை தீர்ப்பதிலும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் வகையில், நேர்மறை வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அன்பும் நெகிழ்ச்சியும் நிரம்பிய வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது 75வது பிறந்த நாளில் தொலைபேசியில் அழைத்து தனது உள்ளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்கு […]

சீனாவைப் போலவே, கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் புதிய நோய்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. ஆனால் இந்த முறை கேரளாவில் மிகவும் பயங்கரமான ஒரு நோய் தோன்றியுள்ளது.. மூளையை உண்ணும் அமீபா நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் காரணமாக கேரளாவில் ஏற்கனவே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரள சுகாதாரத் துறை இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமீபிக் […]

பிரதமர் நரேந்திர மோடியின் உணவு முறை மற்றும் ஃபிட்னஸ் எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும், அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் அவரின் ஃபிடன்ஸ் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு முருங்கை பராத்தா.. இது விரைவாக […]

திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள் நிஜத்திலும் சில சமயங்களில் அரங்கேறுவது உண்டு. ‘திருட்டுப் பயலே’ படத்தில் நடிகர் ஜீவன் ஒரு தம்பதியின் கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பார். அதேபோல், கேரளாவில் திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து, அவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பல்லித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமல். […]

பஹாவல்பூரில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த துல்லிய தாக்குதலில், ​​பயங்கரவாத மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் குடும்பத்தினரை இந்தியப் படைகள் “துண்டு துண்டாக கிழித்தெறிந்தன” என்று ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டார்.. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில், “பயங்கரவாதத்தைத் தழுவி, இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக டெல்லி, காபூல் மற்றும் காந்தஹார் ஆகிய நாடுகளுடன் போரிட்டோம். எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகு, […]

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் முழுவதும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர்.. பிராக்தா கிராமத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் […]