உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை ரயில் பாதையை கடக்க முயன்றபோது 4 பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். அதே நேரத்தில், சம்பவ இடத்துக்குச் அதிகாரிகள் உடனடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்முனை வேகத்தில் மேற்கொள்ள […]

2014 ஆம் ஆண்டில் உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, இன்று ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் மூன்றாவது பெரிய நாடாக மாற உள்ளது என்றும், நிலையான சீர்திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியால் இது உந்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லி பொருளாதாரப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய சீதாராமன், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார மாற்றம் கட்டமைப்பு […]

“நாடு முழுவதும் டிஜிட்டல் கைது வழியாக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பலரிடம் ரூ.3,000 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக NPCI வெளியிட்டுள்ள வழிக்காட்டுதல் அறிக்கையில், இந்த ‘டிஜிட்டல் கைது’ மோசடியில், குற்றவாளிகள் முதலில் ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, பின்னர் உங்களை நம்ப வைக்க வீடியோ அழைப்புக்கு மாறுவார்கள். அவர்கள் […]

பணி ஓய்வுக்குப் பின் பெரும்பாலானோருக்குப் பொருளாதார ரீதியாக ஒரு பயம் ஏற்படுவது இயல்பு. மாத வருமானம் நின்ற பிறகு, சேமிப்பு அல்லது குழந்தைகளை நம்பியே வாழ வேண்டிய கட்டாயம் உருவாகலாம். ஆனால், நீங்கள் வசிக்கும் சொந்த வீட்டின் மூலமாகவே நிலையான மாத வருமானம் பெற முடியும் என்றால் நம்புவீர்களா..? ஆம், இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டம்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டம் (Reverse Mortgage Scheme). இந்தத் திட்டத்தின் […]

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான பிரச்சாரத்தை மத்திய ஓய்வூதிய அமைச்சகம் இம்மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்துகிறது. நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான பிரச்சாரத்தை மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இம்மாதம் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்துகிறது. ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்கும் வகையிலும், ஓய்வூதியம் தொடர்பான அனைத்து அம்சங்களையம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பதற்கும் […]

இந்தியாவில் தொற்று ஏற்படும் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) அறிக்கை அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்பது பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ICMR தனது வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வக வலையமைப்பின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவலை வழங்கியுள்ளது. ICMR அறிக்கையின்படி, ஜனவரி மற்றும் மார்ச் 2025 க்கு இடையில் […]

இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பயங்கரமான ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது. கோர்பா பயணிகள் ரயில் (Korba Passenger Train) மற்றும் சரக்கு ரயில் (Freight Train) நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து பிலாஸ்பூர்–கட்னி (Bilaspur–Katni) ரயில் பாதையில் உள்ள லால் க்ஹாந்த் (Lal Khand) பகுதியில் ஏற்பட்டது. மீட்பு பணிகள் தீவிரம் விபத்து குறித்து தகவல் […]

பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் 41 வயது நடிகை ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சமீபத்தில் நடிகைக்கு ‘Naveenz’ என்ற பெயரில் ஃபேஸ்புக் மூலம் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் வந்துள்ளது. அந்த நபர் யார் என்று தெரியாததால் நடிகை அதனை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், அந்த நபர் மெசஞ்சர் வழியாக நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், […]

கர்நாடக மாநிலம் சாமராஜ நகர் மாவட்டம் கொல்லேகலில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு மற்றும் செவிப்புலன் பள்ளியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், கடந்த 13 வருடங்களுக்கும் மேலாகப் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தங்களது நிலையை வெளியில் யாரிடமும் எடுத்துச் சொல்லவோ, பேசவோ […]

ChatGPT Go Free என்பது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக OpenAI நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய இலவச சேவையாகும். இதன் மூலம் எந்தக் கட்டணமும் இல்லாமல் ChatGPT எனும் மேம்பட்ட AI சேட் கருவியை பயன்படுத்த முடியும். ChatGPT Go Free என்றால் என்ன? யார் இதைப் பெறலாம், எப்படிப் பெறுவது, மற்றும் கவனிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.. ChatGPT Go Free என்றால் என்ன? […]