தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. இணையதளம் மூலம் இந்த விண்ணப்பங்களை 24.10.2025 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பொறுப்புக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவால் ஆய்வு செய்யப்படும். தகுதி, அனுபவம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வுக்குழு இறுதி தேர்வை மேற்கொள்ளும். […]

மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான ஏ-2 படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சாராத நிறுவனங்களில் தற்காலிக பணி நிமித்தமாகவோ அல்லது வெளிநாட்டு சேவைக்காகவோ பணி புரிந்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில், படிவம் ஏ-2-வை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனத்தின் துறை சார்ந்த அதிகாரிகளிடம் […]

அக்டோபரில் நவராத்திரி, தசரா, தீபாவளி மற்றும் சத் பூஜை போன்ற முக்கிய பண்டிகைகள் வருவதால் இந்த மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், நவராத்திரியுடன் பண்டிகை உற்சாகம் அதிகரிக்கத் தொடங்குகிறது. தசரா, கர்வா சௌத், தீபாவளி மற்றும் சத் பூஜை போன்ற முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களில் கொண்டாடப்படும். இதன் விளைவாக, நாடு முழுவதும் […]

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17-ல் தொடங்கி மார்ச் 9-ம் தேதி முடிவடையும். அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடையும். இதுதவிர தேசிய கல்விக் கொள்கையின்படி பத்தாம் வகுப்புக்கு மட்டும் நடப்பாண்டு முதல் இரு பொதுத்தேர்வுகள் […]

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இந்த மாணவி பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, ஒரு உறவினரிடமிருந்து நண்பர் கோரிக்கை (friend request) வந்தது. அதை ஏற்றுக்கொண்ட மாணவி, அவருடன் பேச தொடங்கியுள்ளார். நாளடைவில், அந்த நபர் மற்றொரு நபரையும் அறிமுகப்படுத்த, இருவருடனும் அந்த மாணவி நெருங்கி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியுடன் இருவருமே உல்லாசமாக […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த ஏ.பி.வி. மேத்யூ மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொனனகுண்டே காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில், மேத்யூ தனது செல்போனில் 2,500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததுடன், தன்னையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேத்யூ, பல பெண்கள் மற்றும் இளம் […]

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் நிரூபன் என்ற இளைஞக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனால், நண்பர்களுடன் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அந்தப் பெண் நிரூபனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு கிளம்பினார். பயணத்தின்போது நிரூபன் மது போதையில் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]

இந்த ஆண்டு தீபாவளி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரவுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை கணிசமாக உயர்த்தக்கூடிய 2 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. அகவிலைப்படி (DA) உயர்வு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடி நிதி நிவாரணத்தை வழங்கும். உதாரணமாக 55% அகவிலைப்படி பெற்றவருக்கு ரூ.9,000 ஓய்வூதியம், ரூ.4,950-ஆக இருக்கும். இது 58% ஆக உயர்த்தப்படும்போது, ரூ.5,220 ஆக அதிகரிக்கும். அதாவது மாதத்திற்கு […]