உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் அலிகர் பகுதியைச் சேர்ந்த அமித் குமார், தனது மனைவி ரூபி மற்றும் 3 குழந்தைகளுடன் கர்ஹி சௌகாண்டி கிராமத்தில் வாடகைக்கு வசித்து வந்தார். அதே பகுதியில் ராகுல் (36) என்பவரும் வாடகைக்கு தனியாக வசித்துள்ளார். ரூபியும் ராகுலும் ஒரே தொழிற்சாலையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்துள்ளனர். இதனால், ராகுல் தினமும் ரூபியைத் தனது பைக்கில் தொழிற்சாலையில் இருந்து ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, தினமும் காலையிலும் மாலையிலும் அமித்தின் […]

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வதி அச்சு (39) என்ற இளம்பெண், ‘ஹனிடிராப்’ (Honeytrap) என்னும் வலையை விரித்து 300-க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி, வீடியோக்களை எடுத்துக் கொண்டு லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்ததாகக் கூறப்படும் சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் குறிவைத்து இவர் பல தந்திரங்களை மேற்கொண்டதாகவும், 2.5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தித் தப்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி […]

நாட்டில் ஃபாஸ்டேக் (FASTag) முறையில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், Know Your Vehicle (KYV) என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த KYV புதுப்பிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர் குறித்த தகவல்களை அவ்வப்போது புதுப்பிப்பது போல, இனி வாகனம் குறித்த தகவல்களையும் புதுப்பிக்க வேண்டும். இந்த அவசர நடவடிக்கைக்கான முக்கியக் காரணம், சில லாரி ஓட்டுநர்கள் கார்களுக்கான […]

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், உள்நாட்டு அரசு நிறுவனங்களை தாங்கிப் பிடிக்கும் வகையிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இனி அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசு நிகழ்ச்சிகளில் கர்நாடக பால் கூட்டமைப்பின் ‘நந்தினி’ தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மத்திய, […]

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர், ஆன்லைனில் வெளியான கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி, ஒரு மோசடி கும்பலிடம் சிக்கி சுமார் ரூ. 11 லட்சம் இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில், அந்த ஒப்பந்ததாரர் ஆன்லைனில், “என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒருவரைத் தேடுகிறேன்” என்ற விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இந்த விளம்பரத்தை கிளிக் செய்து தனது விவரங்களைப் பதிவு செய்த அவருக்கு, ஒரு பெண் பேசுவது போன்ற வீடியோவும் வந்துள்ளது. […]

இணையப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கூகுள் குரோம் (Google Chrome) உலாவியின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசின் CERT-In (Computer Emergency Response Team – India) அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது. புதிய பதிப்புகளுக்கு மேம்படுத்தப்படாத பழைய குரோம் பிரவுசர்களில் தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைப் பயன்படுத்தி, இணைய குற்றவாளிகள் பயனாளிகளின் தரவுகளைத் திருடுவதற்கான வாய்ப்புகள் […]

இன்று (நவம்பர் 1) அதிகாலை, ஜெத்தா (சவூதி அரேபியா) – ஹைதராபாத் இடையே பறந்த இண்டிகோ விமானம் 6E 68-இல் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் முழுமையான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 185 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் காலை 7.30 மணியளவில் மும்பை நோக்கி திருப்பி விடப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) உடனடியாக அவசர நடைமுறைகளை செயல்படுத்தி, அனைத்து பாதுகாப்பு […]

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுஹா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எகாதசி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் நிர்வாகத்தில் இயங்கும் இந்தக் கோவிலுக்கு திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் தடுப்பு கம்பிகள் சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துயரச்சம்பவம் எப்படி நடந்தது? கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பெரும் அளவிலான கூட்டம் ஒரே […]

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சொந்த அண்ணனே தங்கையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் ஆசிஷ் நிஷாத் (32) என்பவரது தங்கை நீலம் (19). அரசு வழங்கிய சுமார் ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்வதில் அவர்களிடையே நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்துள்ளது. சமீபத்தில், இந்தப் பணப் பங்கீடு தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராம் […]